'மறுபிறவி இருந்தால் உன் மகளாகவே பிறப்பேன்', தனது அம்மாவின் மறைவிற்குப் பிறகு நாடோடிகள் அபிநயா போட்ட எமோஷனல் பதிவு
பிரபல நடிகை அபிநயா வின் தாயார் மறைந்திருக்கும் செய்தி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 'நாடோடிகள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிநயா. மிக அழகான முகம், தோற்றம் உடைய அபிநயா அவர்களுக்கு இயற்கையிலேயே சரியாக வாய் பேசாத, காது கேட்கும் திறன் குறைபாடு உடையவர். இருந்தாலும் இவருடைய தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியினாலும் சினிமாவில் தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் அபிநயா.
அதுமட்டுமில்லாமல் இவரால் சரியாக வாய் பேச முடியாது என்பதே நாடோடிகள் படம் வெளியான பின்னர் தான் பலருக்கும் தெரிந்தது. அதற்குப் பிறகு மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் ஆயிரத்தில் ஒருவன், ஈசன், ஏழாம் அறிவு, வீரம், பூஜை, தனி ஒருவன், குற்றம் 23, மார்க் ஆண்டனி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் முதல் முதலில் தெலுகு சினிமாவில் தான் அறிமுகமானார். தற்போது இவர் கன்னடா, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.
அபிநயாவின் பதிவு:
தற்போது நடிகை அபிநயா தனது அம்மாவின் மறைவு குறித்து, சமூக வலைதள பக்கத்தில் போட்டிருக்கும் பதிவுதான் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில், அம்மா ஆகஸ்ட் 17ஆம் தேதி எங்கள் இதயங்களில் ஆழமாக பதிந்துவிட்டது. இன்னும் நீங்கள் எங்களுடன் இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நீங்கள் திடீரென மறைந்தது, நான் என்னில் ஒரு பகுதியை இழந்ததைப் போல் இருக்கிறது. உங்களைப் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் நான் வீட்டில் காத்துக் கொண்டிருந்தேன். நான் கீழே ஓடி வந்து உங்கள் பைகளை எடுத்துச் செல்ல ஆவலாக இருந்தேன்.
அபிநயாவின் அம்மா மறைவு:
ஆனால், அது எதுவும் எடுக்கவில்லை. நீங்கள் நன்றாக தான் இருந்தீர்கள், அப்பாவிற்கு அழைப்பு வருவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பு வரை. எந்தப் போராட்டமும் இல்லாமல், மறைந்து போவதை நான் அதிர்ஷ்டம் என்று நினைக்கவில்லை. ஆனால், நீங்கள் அமைதியான மரணத்தை பெற பிரார்த்தனை செய்தீர்கள். அதனால் வேறு வழியில்லாமல் கடவுள் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றி விட்டார் என்று நினைக்கிறேன். தற்போது எனக்கு தாத்தாவின் மறைவு ஞாபகத்திற்கு வருகிறது. உங்கள் திருமணத்திற்காக நீங்களும் தாத்தாவும் ரிக்ஷாவில் போகும்போது அவர் இறந்து விட்டார். தந்தை மற்றும் மகள் இருவரும் ஒரே மாதிரியாக இறந்து இருப்பது தற்செயலாக இருக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மா குறித்து அபிநயா:
மேலும், என் வாழ்வின் அன்பை நான் இழந்துவிட்டேன். நாம் இருவரும் பிடிக்க முடியாதவர்களாக இருந்தோம். நீங்கள் மிகவும் வெளிப்படையாக, பறந்த மனப்பான்மையுடன், பேசி, நகைச்சுவையாக விளையாடி,முத்தமிட்டு, கட்டிப்பிடித்து மிகவும் அன்பாக இருந்தீர்கள். இதை நான் எந்த குடும்பத்திலும் பார்த்ததில்லை? என் கேமராவில் சிறந்த நடிகர்களின் நீங்களும் ஒருவர். அந்த நினைவுகளை நான் எப்போதும் நேசிப்பேன். நான் எப்போதும் உங்களை வணங்குகிறேன் அம்மா. நீங்கள் கடவுளுக்கு பயந்தவராக இருந்தீர்கள். எப்போதும் கடவுளை பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறீர்கள்.
ரசிகர்கள் ஆறுதல் :
பின் எனக்காக அனைத்தையும் தியாகம் செய்வீர்கள். நான் செல்லும் இடமெல்லாம் பயணம் செய்து, என்னை நீங்கள் ஆதரிக்காவிட்டால் நான் சாதித்திருக்க மாட்டேன். எனக்கு மறுபிறவி கிடைக்கும்போதெல்லாம் மீண்டும் உன் மக்களாக இருக்க விரும்புகிறேன். உன்னை நேசிப்பது மட்டுமே எனக்கு இருக்கும் நிலையான விஷயம் அம்மா. நீங்கள் இல்லாத உண்மையை நான் ஏற்றுக்கொண்டேன். உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும், நன்றாக ஓய்வெடுங்கள் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இவரின் பதிவை பதிவை பார்த்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அபிநயாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.