சமூக வலைதளத்தின் மூலம் பிரபலமடைந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறாரகள். அந்த பிரியா வாரியார் தற்போது பிரகிடா வரை அனைவரும் சமூக வளைத்ததின் மூலம் பிரபலமாடைந்தவர்கள் தான். அந்த வகையில் நடிகை அதுல்யா ரவியும் ஒருவர். கோயம்பத்தூர் தமிழ் பெண்ணான இவர், 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே’ படத்தில் கண்களால் காதல் செய்து நமக்கு அறிமுகமானவர். இவருக்கு சமூக வளைத்தளத்தில் ரசிகர் ஆர்மிகளும் பல உள்ளது.

இப்படி கிடைத்த பிரபலம் மூலம் இவருக்கு சினிமாவில் அடுத்தடுத்தது வாய்ப்பும் கிடைத்தது.காதல் கண் கட்டுதே படத்திற்கு பின்னர் இவர் ஏமாளி என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் நடித்த ‘ஏமாளி ‘ படம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் அதுல்யா ரவி முதன் முறையாக கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்தபடத்தில் உள்ள அதுல்யா ரவியின் புகைப்படங்களை பலரும் பகிர்ந்து எங்களுக்கு உங்கள் குடும்ப பாங்கான லுக் தான் பிடிக்கும் அதனால் இப்படியெல்லாம் நடிக்காதீர்கள் என்று தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வந்தார்கள். 

Advertisement

பின்னர் இனி இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிய அதுல்யா அதற்கு மன்னிப்பும் கேட்டார்.தற்போது நாடோடிகள் 2, சுட்டு பிடிக்க உத்தரவு, என் பெயர் ஆனந்தன் போன்ற படங்களில் நடித்துஇருந்தார். சமீபத்தில் இவர் நடித்துள்ள கேப்மாறி படத்தில் கூட அம்மணி இரட்டை வசனத்தை பேசியதை கண்டு ரசிகர்கள் மீண்டும் அதிர்ச்சியடைந்தது.

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் அதுல்யா அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வளைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் உடலை வில்லைப்போல வளைத்து யோகா சனம் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை மீண்டும் குதூகலப்படுத்தியுள்ளார்.

Advertisement
Advertisement