நடிகை இனியா ,2011 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான “வாகை பூ சூடவா” என்ற படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். அந்த படத்திற்கு பின்னர் இவர் “மௌனகுரு” படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

அனைவரையும் வசீகரிக்க கூடிய முக அழகை கொண்டதால் அடுத்தடுத்து குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், இழுத்து போத்திகொண்டு நடித்தால் இவரால் முன்னனி நடிகையாக தமிழில் வாய்ப்பு வரவில்லை.

இதையும் படியுங்க : அணுவுலை அருகில் ஷூட்டிங்.! நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய விவேக்.! 

Advertisement

இதனால் கொஞ்சம் கவர்ச்சியிலும் இறங்கினார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் வாய்ப்பும் கிடைத்து. தமிழில் சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் மலையாளத்தில் தாராளமாக பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.

இடையில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததற்கு காரணமே இவர் நடுவில் உடல் எடை கூடி சற்று பருமனாக மாறியது தான். ஆனால், தற்போது தனது உடல் எடை குறைத்து ஒல்லியான உடல் அமைப்பிற்கு திரும்பியுள்ளார். சமீபத்தில் த்னது கெட்டப்பை மாற்றி கவர்ச்சியான கொடுத்துள்ளார்.

Advertisement
Advertisement