தமிழ் சினிமாவில் 2004 இல் வெளியான காதல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சந்தியா. தனது 10 வகுப்பு படிக்கும் போதே ஹீரோயினாக நடிக்க த்துவங்கிவிட்டார்.25 செப்டம்பர் 1988 இல் பிறந்த நடிகை சந்தியாவின் சொந்த ஊர் கேரளா மாநிலம் கொச்சி தான். ஆனால் இவர் வளர்ந்தது படித்தது எல்லாம் சென்னையில் தான்.

Advertisement

இவரது அப்பா அஜித் ஒரு வங்கி ஊழியர் மற்றும் அம்மா மாயா ஒரு மேக் அப் கலைஞர்.மேலும் இவருக்கு ராகுல் என்ற ஒரு அண்ணனும் இருக்கிறார்.காதல் படத்தில் தனது சிரிப்பான தனது சிறு வயதிலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சந்தியா.அந்த படத்திற்கு பின்னர் மலையாளம், தெலுகு, கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடியத்துவிட்டார். இவர் தமிழில் இதுவரை

*காதல்
*டிஷும்
*வல்லவன்
*கூடல் நகர்
*தூண்டில்
*வெள்ளித்திரை
*யா யா

Advertisement

போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடித்த காதல் மற்றும் டிஷும் படத்தை தவிர வேறு எந்த படமும் இவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை.2016 டிசம்பர் 6 இல் வெங்கட் சந்திரசேகரன் என்ற ஐடி இல் வேலைப்பார்கும் நபரை திருமணம் செய்து கொண்டார்.முதலில் இவர்களது திருமணம் கேரளாவில் தான் வெகு விமர்சியாக நடிபெறவிருந்தது ஆனால் 2015 இல் சென்னையில் வெள்ளம் வந்த போது இவரது திருமணத்தை சென்னையில் மிக எளிமையாக முடித்துவிட்டு.

Advertisement

அதில் மிச்சம் செய்த பணத்தை சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர்களுக்கு நன்கொடையாக அளித்தார்.மேலும் இவர்களுக்கு 2016 இல் இவர்களுக்கு ஷீமா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது படங்களில் நடிப்பதை நிறுதிவிட்ட சந்தியா தனது கணவர் மற்றும் குழந்தையுடம் கேரளாவில் வசித்து வருகிறார்.

Advertisement