நேருக்கு நேர் , பிரியமுடன் போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை கௌசல்யா. 1979 ஆம் ஆண்டு பெங்களுரில் பிறந்த இவர் 1996 ஆம் ஆண்டு பாலச்சந்தர மேனன் இயக்கிய ஏப்ரல் 19 என்ற படத்தின் மூலம் சினிமா துறைக்குள் நுழைத்தார்.அதன் பின்னர் 1997 ஆம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தின் மூலம் தமிழ் திரை துறையில் அறிமுகமானார். இதுவரை 30 கும் பெறப்பட்ட தமிழ் படங்களில் நடித்த இவருக்கு தற்போது 40 வயதாகிறது. இந்த வயதிலும் படங்களில் நடித்து வரும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
ஒரு சில முன்னணி நடிகைகள் சினிமாவில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருவார்கள் . ஆனால் ஒரு குறைந்தபட்ச படங்களில் நடித்த கௌசல்யா 40 வயதாகியும் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று பலரும் நினைத்து வந்தனர். இந்நிலையில் தற்போது திருமணம் குறித்து யோசித்துள்ள கௌசல்யா விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வந்துள்ளது.
40 வயதாகியும் திருமணம் செய்துகொள்லாமல் இருந்த இவருக்கு திருமணம் செய்துவைக்க அவரது வீட்டிலும் மும்மரம் காட்டி வருவதால்.கௌசல்யாவின் திருமணம் இந்த ஆண்டு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கபடுகிறது
ஆனால் தற்போதும் மலையாளத்தில் லீலாம் 2 என்று படத்திலும், எங்க இருந்தீங்க இவ்வளவு நாளா என்ற தமிழ் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் திருமணதிற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பாரா என்பது சந்தேகம் தான்.