வாலி படத்தில் சிம்ரனுக்கு முன் இந்த நடிகைதான் நடிச்சாராம் ! புகைப்படம் உள்ளே

By Ajju · 11/3/2018
இயக்குனரும் நடிகுருமான எஸ் ஜே சூர்யா அஜித்தை வைத்து எடுத்த படம் வாலி.தனது முதல் படத்திலேயே ஒரு மாபெரும் நடிகரை வைத்து சூப்பர் டுபர் ஹிட்டை அளித்தார் எஸ் ஜே சூர்யா. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித் அவருக்கு கார் ஒன்றை கூட பரிசலித்தார் என்ற செய்திகளும் உண்டு. அது மட்டும் இல்லாமல் இன்னும் ஸ்வரஷ்யமான விஷயம் என்ன வென்றால். எஸ் ஜே சூரியா ஒரு கதையை சக்ரவத்தி ப்ரோடுசரிடம் கூறியிருந்தாராம் கதையை கேட்ட சக்ரவர்த்தி இந்த படத்தை நாம் கண்டிப்பாக செய்வோம் என்று உறுதியளித்துள்ளார். ஆனால் சில நாட்கள் கழித்து இந்த கதை பிடிக்கவில்லை அதனால் அஜித்தை வைத்து இருவேடத்தில் எடுக்க ஒரு கதை ஒன்றை தயார் செய்ய சொல்லியிருக்கிறார். இதனை கேட்டுக்கொண்ட எஸ் ஜே சூர்யா வெறும் 15 நாட்களில் அஜித்திற்கு ஏற்றார் போல் ஒரு கதையை தயார் செய்துள்ளார் அந்த படத்தில் தான் நடிகை ஜோடிக்கவையும் அறிமுகம் செய்தார் எஸ் ஜே சூர்யா. ஆனால் படம் தொடங்கும் போது பெப்சி படைப்பாளிகள் பிரச்சனை, சினிமா ஸ்டிரைக் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஓடிக்கொண்டு இருந்தது அதனால் அவர்கள் ஆதரவோடு படத்தை தொடங்கி முடித்தனர். முதலில் ஜோதிகவிற்கு பதிலாக கீர்த்தி ரெட்டி தான் நடிக்கவிருந்தாரம்.ஆனால் ஜோதிகா நடித்த பல கட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாம்.இருப்பினும் இந்த படத்தில் ஜோதிகவிற்கு அந்த படத்தில் 1லட்சம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டது என்று கூறப்படுகிறது.அறிமுக நடிகையாக வெறும் சிறப்பு தோற்றத்தில் நடித்த ஜோதிகவிற்கே இவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது மிகவும் ஆச்சர்யம் தான்
Tamil Behind Talkies AMP · Quick view
View full