தமிழ் சினிமாவில் 90 கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் மாளவிகா. அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘உன்னை கொடு என்னை தருவேன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர். அந்த படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்துடன் இணைந்து ஆனந்த பூங்காற்றே என்ற படத்திலும் நடித்தார். அஜித்துடன் நடித்த பின்னர் நடிகை மாளவிகா அவர்கள் ரோஜா வனம், வெற்றிக் கொடி கட்டு, கந்தா கடம்பா கத்திரவேலா, பேரழகன், வசூலராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, வியாபாரி, நான் அவன் இல்லை, திருட்டுப்பயலே என்று பல படங்களில் நடித்து வந்தார்.

ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த மாளவிகா கடந்த 2005 ஆண்டு ‘சி யூ அட் நைட்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் தான் இவரது சினிமா வாழ்க்கைக்கு முட்டுக்கட்டாக இருந்தது. அந்த படத்தில் நடித்ததற்கு பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.பின் இவர் சில படங்களில் துணை நடிகையாகும், ஐட்டம் டான்ஸராகவும் ஆட்டம் போட்டார். அதிலும் வாய்ப்புகள் சரியாக அமையாமல் போனதால் கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆகி விட்டார்.

Advertisement

இவர்களுக்கு அனன்யா என்ற மகளும், ஆரவ் என்ற மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின்பும் சில படங்களில் நடிகை மாளவிகா நடித்தார். இவர் கடைசியாக 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஆயுதம் செய்வோம், ஆறுபடை என்ற படத்தில் நடித்தார். மேலும், நடிகை மாளவிகா அவர்கள் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருப்பார். அதேபோல இவர் அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிடுவது வழக்கம்

அந்த வகையில் சமீபத்தில் இவர் நீச்சல் குளத்தில் நீச்சல் உடை அணிந்தபடி இருக்கும் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் திருமணமாகி ஒரு மகள் மற்றும் மகன் இருக்கும் நிலையில் இப்படி ஒரு உடல் தேவையா என்று மாளவிகாவை விமர்சித்து வருகிறார்கள்

Advertisement
Advertisement