பாத்து பாத்து பலூன் வெடிச்சிற போகுது - பார்வதி நாயர் போஸை கலாய்க்கும் நெட்டிசன்கள்.

By Rajkumar · 15/12/2020

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த படத்தில் அஜித் அருண்விஜய் த்ரிஷா, அனுஷ்கா ஷெட்டி, பார்வதி நாயர் ,விவேக் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தார்கள். இதில் பார்வதி நாயர் மட்டும் தமிழ் சினிமாவிற்கு புதுமுகமாக அறிமுகமாகி இருந்தார்.

தனது முதல் படத்திலேயே அஜித் படத்திலேயே நடித்த அதிர்ஷ்டம் இவருக்கு கிடைத்திருந்தது. அதேபோல இந்த படத்தின் மூலம்தான் அருண் விஜய்க்கு ஒரு மாபெரும் திருப்பு முனையாக அமைந்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.என்னை அறிந்தால் படத்திற்கு முன்பாகவே தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘நிமிர்ந்து நில் ‘ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கால் பதித்தார் பார்வதி நாயர்.

இவர் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்யின் மனைவியாக நடித்திருந்தார். கேரளாவை சேர்ந்த இவர் சமீபத்தில் பாபி சிம்ஹா நடிப்பில் வெளிவந்த ஒரு வெப் சீரிஸிலும் நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்து வருகிறார். என்னை அறிந்தால் படத்திற்கு பின்னர் இவர் உத்தமவில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், வெள்ள ராஜா போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் வைபவ் நடித்துவரும் ஆலம்பனா என்ற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் அம்மணி அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருபவர். அந்த வகையில் சமீபத்தில் இவர் ;பலூன்களை வைத்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள், பாத்து பாத்து பலூன் வெடிச்சிற போகுது எனவும் யாரெல்லாம் பலூன் வெடிக்க வேண்டும் ஆசைப்படுகிறீர்கள் என்றும் கலாய் கருத்துக்களைதெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full