தெய்வீகத்தை குறிக்கும் 'வேல்' வடிவத்தை குத்தும் இடமா அது ? நெஞ்சிருக்கும் பட நடிகையை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.
சினிமாவை பொறுத்த வரை நடிகைகள் செய்யும் சில விஷயங்கள் சர்ச்சையில் முடிந்து விடுகிறது. அந்த வகையில் நடிகை பூனம் கவுர் குத்திய டாட்டூ ஒன்று ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. தமிழில் கடந்த 2007ஆம் ஆண்டு விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நரேன் நடிப்பில் வெளியான 'நெஞ்சிருக்கும்வரை' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூனம் கவுர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த இவர் திரைப்படத்திற்கு வரும் முன்பாக மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். கல்லூரியில் படிக்கும் போதே இவருக்கு பட வாய்ப்புகள் வந்துள்ளது. தனது 20 வயதில் 2006ஆம் ஆண்டு மாயாஜாலம் என்ற படத்தில் நடித்து சினிமாத்துறையில் அறிமுகமானார்.
தமிழில் நெஞ்சிருக்கும் வரை என்ற படத்தில் அறிமுகம் ஆனார். அதன்பின்னர் உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, என் வழி தனி வழி, அச்சாரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். ஆனால், தமிழில் இவரால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. இவருக்கு ஷாம் என்ற காதலர் இருக்கிறார். தற்போது 32 வயதானா பூனம் கவுருக்கும் ஷாமுக்கும் திருமணம் ஆகிவிட்டது என செய்திகள் வந்துள்ளது. ஆனால் இதுவரை ஷாமை பொது வெளியில் காட்டியதில்லை பூனம்.இவர் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் மிகப்பெரிய ரசிகை ஆவார். எனவே, இவருக்கும் நடிகை பூனம் கவுருக்கும் தொடர்பு இருப்பதாக தெலுங்கின் சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி சமீபத்தில் பெரும் சர்ச்சையை கூட கிளப்பி இருந்தார்.
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய நடிகை பூனம் கவுர், பவன்கல்யாண் மீது எனக்கு ஆசை இருந்தது உண்மைதான். ஆனால் இவை தவிர வேறு எந்த தவறும் செய்யவில்லை. ஸ்ரீரெட்டி கூறுவது முற்றிலும் பொய்யான விஷயம். நான். எனக்கு பவன் கல்யானை மிகவும் பிடிக்கும் என்பது உண்மைதான். அவரது மகளுக்கு உடம்பு சரியில்லை என்றதும் நான் அவருக்காக விரதம் கூட இருந்தேன். எங்கள் உறவு மிகவும் புனிதமானது எங்களுக்குள் எந்த தவறான விஷயம் நடந்தது இல்லை என்றுகூறி இருந்தார்.
இந்த சர்ச்சைக்கு பின்னர் நடிகை பூனம் கவுருக்கு வேறு எந்த படத்தின் வாய்ப்பும் கிடைக்கவில்லை என்பது வேறு ஒரு கதை. ஆனால், எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் பூனம் கவுர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது மார்புப் பகுதியில் தெய்வீகத்தை குறிக்கும் வேல் வடிவத்தை டாட்டவாக குத்தியுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பலர் ''என்று இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.