தென்னிந்தியா சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பூர்ணா. இவர் கேரளாவை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் ஷாம்னா காசிம். இவரை பலரும் குட்டி அசின் என்று தான் அழைத்தனர். இவர் தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். ஆனால், அதற்கு முன் இவர் மலையாளத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான ‘மஞ்சு போலொரு பெண்குட்டி’ என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு மலையாளத்தில் நிறைய பட வந்து இருந்தது. அதற்கு பிறகு இவர் தமிழில் கந்த கோட்டை, ஆடுபுலி, ஜன்னல் ஓரம், தகராறு, மணல் கயிறு 2, கொடி வீரன், சவரக்கத்தி, காப்பான் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். இடையில் பட வாய்ப்புகள் இல்லாமல் பூர்ணா தவித்து கொண்டு இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை.

Advertisement

இடையில் இவர் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று இருந்தார். இதை தொடர்ந்து மீண்டும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பூர்ணா நடிப்பில் வெளியாகியிருந்த விசித்திரன் படம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இது மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஜோசப் என்கிற படத்தின் தமிழ் ரீமேக்.

இயக்குனர் பத்மகுமார் தான் தமிழில் விசித்திரன் படத்தைஇயக்கி இருந்தார். மேலும் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்து இருந்த நெஞ்சுக்கு நீதி படத்தில் பூர்ணா நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடிகை பூர்னாவிற்கும் துபாயை சேர்ந்த தொழிலதிபர் Shanid Asif Ali என்பவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

Advertisement

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் தனக்கும் Shanid Asif Aliகும் திருமணம் நடந்து முடிந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார் பூர்ணா. இப்படி ஒரு நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக பூர்ணா அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு வளைகாப்பு நடைபெற்றது. அந்த வளைகாப்பில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல்ல்கி இருந்தது.

Advertisement

இந்த நிலையில் தான் தற்போது கர்ப்பமாக இருக்கும் பூர்ணாவுக்கு மீண்டும் இரண்டாவது முறையாக வளைகாப்பு பாரம்பரிய முறைப்படி நடந்திருக்கிறது. நடிகை பூர்ணா கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதினால். கேரளா மாநிலம் கண்ணூரில் நடத்தப்படும் பாரம்பரிய முறைப்படி 7வது மாதத்தில் வெள்ளை வேட்டி கட்டி பூர்ணாவுக்கு அவரது குடும்பம் எளிமையான முறையில் வளைகாப்பு நடத்தியது. இந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்த பூர்ணம் தான் மிகவும் மகட்சியாக இருப்பதாக தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement