என் வாழ்க்கையில் எதையும் நான் திட்டமிட்டு செய்யவில்லை. எல்லாமே எதிர்பாராதவிதமாக நடந்ததுதான். ஆனால், நடப்பவை எல்லாவற்றினாலும் மிகுந்த சந்தோஷமாக இருக்கின்றேன்” என மகிழ்ச்சி பொங்கப் பேச ஆரம்பிக்கிறார், முதல் படத்திலேயே முத்திரை பதித்த ‘மேயாதமான்’ படத்தின் நாயகி பிரியா பவானிசங்கர்.
சீரியல் தரப்பிலிருந்து ”வெறும் பத்து நாள் மட்டும்தான் ஷூட்டிங். நீங்கதான் பண்ணணும்”னு சொன்னாங்க. சரி, பத்து நாள்தானேனு நடிக்க வந்தேன். அப்போ எனக்கு சீரியலும் பார்ட் டைம்தான். ஏன்னா, அந்த நேரத்தில் எம்.பி.ஏ படிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, கடைசியில் ஷூட்டிங் பத்து நாளையும் கடந்து இரண்டு வருடம் நடந்துச்சு.
சீரியலில் நடிக்கும்போது, சினிமாவில் நடிக்கிற எண்ணம் இல்லை. ஏன்னா, இந்த சீரியல் பண்ணும் போதே என்னைத் தேடி நல்ல படங்களின் வாய்ப்பு எல்லாம் வந்தது. அதனால் வந்த வாய்ப்புகளைத் தவிர்த்தேன்.’நாம ஹீரோயினா நடிச்சியிருக்கலாமே’னு தோணுச்சு. ஏன்னா, சின்னத்திரையில் இருக்கும் பலர் பெரிய திரைக்கு முயற்சி பண்ணும்போது, நாம ஏன் வந்த வாய்ப்புகளை மறுக்கணும்? அதனால, சினிமாவிலும் நடிக்கலாம் என முடிவு செய்தேன்.
‘மெர்சல்’ வரும் போது நம்ம படம் ரிலீஸாகுதுனு சொன்னபோது எனக்கு மயக்கமே வந்துவிட்டது. ஆனால், இப்போது படத்தைப் பற்றி பாஸிட்டிவ் ரிசல்ட் வருகிறது. புதுசா இரண்டு படத்தில் கமிட் ஆகியிருக்கிறேன். அந்தப் படத்தின் ஹீரோக்கள் எல்லாம் போன் பண்ணி வாழ்த்தினாங்க. ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் நாயகன் அமித் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனவுடன் பார்த்துவிட்டு விஷ் பண்ணினார். ஹாப்பியாக இருக்கேன்” என்றவரிடம்,