தொலைக்காட்சியில் இருந்து பல்வேறு நடிகர் நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் புதிய தலைமுறை தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக இருந்து வந்தவர் ப்ரியாபவானி ஷங்கர் .பின்னர் “மேயாதமான்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். கடைசியாக கார்த்திக் நடித்த “கடைக்குட்டி” சிங்கம் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளில் கமிட் ஆகிவரும் நடிகை பிரியா பவானி ஷங்கர் இறுதியாக எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான ‘மான்ஸ்டர்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். தற்போது அதர்வாவிற்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளார். மேலும், கமலின் இந்தியன் 2 படத்திலும் கமிட் ஆகியுள்ளது ப்ரியா பவானி ஷங்கர் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தற்போது ஹரிஷ் கல்யாணுடன் கூட ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகி இருந்தது. இப்படி படங்களில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளத்தில் கூட அம்மணி பிசி தான். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் துபாயில் நீச்சல் குளத்தில் எடுத்த சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த பலரும் துபாயில் நடைபெறும் IPL போட்டிகளை காண சென்றுள்ளர்களா என்று கமன்ட் செய்து வருகின்றனர். இருப்பினும் முதன் முறையாக நீச்சல் குளத்தில் இப்படி ஒரு கோலத்தில் பிரியா பவானி சங்கரின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொஞ்சம் ஷாக்கடைந்துள்ளனர்.

Advertisement
Advertisement