சமீபத்தில் நடிகர் நானா படேகர் மீது பிரபல இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா திடுக்கிடும் பாலியல் குற்றசாட்டை முன்வைத்திருந்தார். இந்தியில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான “மர்டர் ” படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா.

Advertisement

நடிகை தனுஸ்ரீ தத்தா ஹிந்தியில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான “ஹார்ன் ஓகே ப்ளீஸ் ” என்ற படத்தில் நடித்த போது நடிகர் நானா படேகர் பாடல் காட்சியின் போது தம்மிடம் தவறாக நடந்து கொண்டாதால் நடிகர் நானா படேகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் நடிகை தனுஸ்ரீ தத்தா. அதன் பின்னர் அவருக்கு பதிலாக நடிகை ராக்கி சாவந்த் அந்த பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்ததை அடுத்து தனுஸ்ரீ தத்தாவுக்கும், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ராக்கி சாவந்த், தனுஸ்ரீ தத்தா குறித்து அதிர்ச்சியான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து பேசியுள்ள ராக்கி சாவந்த், உண்மையில் நானா படேக்கார் மீது தனுஸ்ரீ தாத்தா பொய்யான குற்றச்சாட்டை வைக்கிறார். உன்மையில் சம்பவம் நடந்த அன்று படப்பிடியின் போது தனுஸ்ரீ தாத்தா போதையில் இருந்தார். படுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா அழகிப்பட்டத்தை வென்றார். எனவே, நானா படேகர் மீது குற்றம் சொல்ல அவருக்கு எந்த அருகதையும் இல்லை என்று ராக்கி சாவந்த் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement