தீரன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரட்சியமானவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங்.009 இல் தெலுங்கில் வெளியான கில்லி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் பின்னர் தமிழ் தெலுகு ,மலையாளம் போன்ற படங்களில் நடித்து தற்போது ஹிந்தி சினிமாவரை சென்றுள்ளார்.

Advertisement

சினிமா துறையில் தனது ரசிகர்களுக்காக எதையும் செய்யும் சில நடிகைகளில் தற்போது ராகுல் ப்ரீத் சிங்கும் இணைந்து விட்டார். ஆம், தனது ரசிகர்களுக்காக கடந்த செவ்வாய் கிழமை அன்று தனது சொந்த ஆன்ட்ராய்டு ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளார் ராகுல் ப்ரீத் சிங்.இதுபற்றி அவர் தெரிவிக்கையில் என்னிடம் 10 மாதங்களாக ஒரு சாப்ட்வேர் நிறுவனம் ஒன்று இந்த ஆப்-பை தயாரிப்பது குறித்து என்னிடம் பேசிவந்தனர். இறுதியில் நான் அதற்கு சம்மதித்து ஒப்புக்கொண்டேன்.

இந்த அப்ளிகேஷன் எனக்கும் எனது ரசிகர்களுக்கும் ஒரு நல்ல பாலமாக அமையும்.எனது பெயரில் முகநூலிலும் ,ட்விட்டரிளும் பல போலி ஐடிகள் உள்ளன.அவர்கள் என்னைப்பற்றிய சில தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். எனவே இந்த ஆப் மூலம் எனது உண்மையான முகநூல் மற்றும் ட்விட்டர் ஐ டி போன்றவை பகிரப்படும்.

Advertisement

Advertisement

மேலும் எனது அனைத்து நடவடிக்கைகளையும் ரசிகர்கள் இந்த ஆப் மூலமாக தெரிந்து கொள்ளமுடியும்.மேலும் இந்த ஆப்பில் நான் ஒரு சில போட்டிகளை நடத்த விருக்கிறேன்.முதல்கட்டமாக ஒரு போட்டி ஒன்றை ஆரம்பித்து அதில் வெற்றி பெறும் ரசிகரை என்னுடன் ஒரு நாள் ஹெலிகாப்டரில் அழைத்துச்செல்வேன் என்று கூறியுள்ளார்.

Advertisement