மூன்று குழந்தைகளுக்கு பின் அடையாளம் தெரியாத அளவிற்கு அழகை இழந்த ரம்பா. புகைப்படங்கள் இதோ.

By Rajkumar · 19/2/2020

தமிழ் சினிமாவில் இடுப்பழகி சிம்ரன், புன்னகை அரசி ஸ்னேகா என்று பலருக்கும் பட்டம் இருப்பது போல தொடை அழகி என்ற வித்யாசமான பட்டத்துடன் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரம்பா. சிம்ரன், ரோஜா, மீனா போன்ற முன்னணி நடிகைகள் இருந்த காலத்தில், சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார் நடிகை ரம்பா. 1993 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான உழவன் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான விஜய் அஜித் போன்ற அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், தெலுகு, ஹிந்தி, மலாயாளம் என்று பல மொழி படங்களில் நடித்து காலாக்கி வந்த ரம்பா. தொடர்ந்து படங்களில் நடித்து ரம்பா பட வாய்ப்புகள் குறைந்ததால் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திர குமார் பிரேமானந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு 2 குழந்தைகளுக்கு தாயான பின்னரும் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என்று தனது கலை பயணத்தை தொடர்ந்து வந்தார். திருமணத்திற்கு பின்னர் 2011 ஆம் ஆண்டு லாண்யா என்ற மகளையும் 2015 ஆம் ஆண்டு ஷாஷா என்ற மற்றுமொரு மகளையும் ஈன்றுடுத்தார் நடிகை ரம்பா. திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற பின்னரும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார். ஏற்கனவே இரண்டு மகளை பெற்றுள்ள நடிகை ரம்பாவிற்கு கடந்த 2018 ஆம் ஆண் குழந்தையும் பிறந்தது.

https://www.instagram.com/p/B8vYYH0nJ7T/

மூன்றவது குழந்தைக்கு தாயான பின்னர் நடிகை ரம்பா, எந்த படத்திலும் நடிக்கவில்லை. இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கிங்ஸ் ஆப் டான்ஸ் ' நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். சமீபத்தில் நடிகை ரம்பா தனது மூன்று குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதில் பொலிவிழந்த முகத்துடன் கன்னங்களில் கருவலையத்துடன் அடையாளம் தெரியாத அளவு மாறி தோற்றமளித்துள்ளார் ரம்பா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full