சினிமா துறையை பொருத்தவரை ஒரு சில நடிகைகள் நடிக்க வருவதற்கு முன்பாக மாடல் அழகிகளாகவோ விளம்பரத்தில் நடித்த நடிகைகளாக தான் இருப்பார்கள். ஆனால், குத்துச்சண்டை மேடையில் அதிரடி பெண்ணாக இருந்து தற்போது சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரித்திகா சிங். தமிழில் 2016 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான “இறுதி சுற்று” படத்தில் கதாநாயகியை நடித்தவர் நடிகை ரித்திகா சிங். இறுதி சுற்று படத்திற்கு பின்னர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்துள்ளார்.

23 வயதாகும் நடிகை ரித்திகா சிங் ஏற்கனவே மிக்சுடு மார்ஷல் அர்ட்ஸ் எனப்படும் குத்து சண்டை போட்டிகளில் கலந்து கொண்டவர். மேலும் அதில் இதுவரை ஒரே போட்டியில் மட்டும் தான் வெற்றிபெற்றுள்ளார். 2013 இல் இவரை ஒரு விமானப்பயணத்தின் போது கண்ட இறுதி சுற்றின் இயக்குனர் சுதா இவருக்கு நடிக்கும் வாய்ப்பை தருவதாக கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : என்னது சதுரங்கவேட்டை பட நடிகையா இது – துபாய் மாப்பிள்ளை, கை குழந்தைன்னு எப்படி ஆகிட்டாங்க பாருங்க.

Advertisement

அவர் கூறியது போலவே இவரை இறுதி சுற்று என்ற படத்தின் மூலம் சினிமா உலகதிற்கு அறிமுகம் செய்தார் இயக்குனர் சுதா. தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘வணங்காமுடி’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் இவர் புடவையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருந்தார்.

இந்த புகைப்படங்களில் ஈர புடவையில் இருந்த ரித்திகாவை பார்த்து பல ரசிகர்களும் சொக்கிப் போனார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த புகைப்படம் எடுப்பதற்கு முன்பாக தவறி தண்ணியில் விழுந்ததாகவும், அதன் பின்னர் தான் அப்படியே ஈர உடையில் போட்டோ ஷூட் செய்ததாகவும் கூறியுள்ள ரித்திகா ஒரு வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement