ரோஜாவின் மகளுக்கு இளம் வயதில் விருது கிடைத்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1992 ஆம் ஆண்டு வெளி வந்து இருந்த “செம்பருத்தி” படத்தின் மூலம் தான் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. அதனை தொடர்ந்து இவர் சூரியன், உழைப்பாளி, அதிரடி படை, வீரா, அசுரன் மக்கள், ஆட்சி ராஜாலி, அடிமை சங்கிலி, என் ஆசை ராசாவே, ஊட்டி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருந்தார்.

மேலும், இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், பிரபு என்று பல நடிகர்களின் படங்களில் நடித்து இருந்தார். அதே போல இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்து இருந்தார். இளம் வயதிலேயே ரோஜா படு கிளாமராகவும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் ரோஜா சின்னத்திரை நிகழ்ச்சிகள், குணச்சித்திர வேடங்களில் நடித்து இருந்தார்.

Advertisement

ரோஜா அரசியல்:

பின் சில ஆண்டு காலாகவே ரோஜா நடிப்பதை நிறுத்தி விட்டு அரசியலில் அதிக ஈடுபாடு செலுத்தி வந்தார். தற்போது இவர் ஆந்திராவில் நகரி எம்எல்ஏ வாக இருக்கிறார். அதோடு ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதில் ரோஜாவுக்கு பங்கு உண்டு. மேலும், ஜெகன்மோகன் அமைச்சரவையில் ரோஜாவுக்கு இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,ரோஜாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. தற்போது ரோஜா அவர்கள் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக மட்டும் செயல்பட்டு வருகிறார்.

ரோஜா செய்த உதவிகள்:

இருந்தும் ரோஜா அப்பகுதியில் பம்பரமாக சுற்றி பணியாற்றி வருகிறார். கொரோனா சமயத்தில் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு ஒரு எம் எல் வாக பல உதவிகளை செய்து இருந்தார் ரோஜா. அதுமட்டும் இல்லாமல் ஊரடங்கின் போது கூட அந்த பகுதியில் தானே இறங்கி கிருமி நாசினியை தெளித்து அசத்தி இருந்தார் ரோஜா. அந்த பகுதி மக்களின் கல்வி, மருத்துவ உதவி என பல விஷயங்களை செய்து அசத்தி இருக்கிறார் ரோஜா. இதனிடையே இவர் கடந்த 2002 ஆம் தமிழ் சினிமா உலகில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான ஆர்.கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

ரோஜா குடும்பம்:

இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளார்கள் இந்நிலையில் ரோஜாவின் மகளுக்கு விருது கிடைத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா இளம் வயதிலேயே தன்னுடைய திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதாவது, இவர் வெப் டெவலப்பர் மற்றும் கண்டெண்ட் ரைட்டர் ஆவார். அதோடு இவர் சிறந்த எழுத்தாளராகவும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் எழுதிய “தி ஃப்ளேம் இன் மை ஹார்ட்” என்ற புத்தகம் ஜி டவுன் என்ற இதழில் வெளியானது.

Advertisement

ரோஜா மகளுக்கு கிடைத்த விருது:

இதனை அடுத்து தென்னிந்தியாவின் சிறந்த எழுத்தாளருக்கான விருது ரோஜாவின் மகளுக்கு கிடைத்துள்ளது. சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த விருது வழங்கும் விழாவில் பிரபல பாலிவுட் நடிகர் சஜன் இந்த விருதை ரோஜாவின் மகளுக்கு அளித்து இருந்தார். இது குறித்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த அரிய விருது இளம் வயதிலேயே ரோஜாவின் மகளுக்கு கிடைத்திருப்பதை அடுத்து பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

Advertisement