தமிழில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியாகி இருந்த இந்த படத்தில் நவ்தீப் ஆர்யா பிரகாஷ்ராஜ் போன்ற பலர் நடித்திருந்தனர் மேலும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை சமந்தா. சண்டிகரை பூர்வீகமாக கொண்ட இவர் அறிந்தும் அறியாமலும் திரைப்படத்திற்கு முன்பாக தெலுங்கில் தான் கதாநாயகியாக அறிமுகமானார்.

இவர் முதல் முதலில் தெலுங்கில் 2004 ஆம் ஆண்டு வெளியான 143 என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அறிந்தும் அறியாமலும் திரைப்படத்திற்கு பின்னர் இவர் மெர்குரிப்பூக்கள், திநகர், முருகா, பஞ்சதந்திரம் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு தமிழில் பெரிதாக அங்கீகாரம் கிடைக்கவில்லை. இருப்பினும் தமிழ் தெலுங்கு பஞ்சாபி இந்தி என்று பல்வேறு மொழிகளில் நடித்து வந்தார்.

Advertisement

இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ப்ராணம் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும், இவருக்கு கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் ஆன நிலையில் கடந்த 2018ம் ஆண்டு விவாகரத்து ஆனது. இவருக்கு ஏற்கனவே 10 வயதில் ஒரு மகனும் இருக்கிறார். இந்தநிலையில் ஷயீல் ஓஸ்வால் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார் சமிக்ஷா

தனது இரண்டாம் திருமணம் குறித்து பேசிய சமிக்ஷா, எங்களுடைய முதல் திருமணம் தோல்வியில் முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று தான் நினைத்தோம். என்னுடைய புகைப்படங்களை பார்த்துவிட்டு பாடல் ஒன்றுக்காக என்னை அணுகினார் ஓஸ்வால். பாடல் படமாக்கப்படும் போது மனதளவில் நெருக்கமானேன் என்று கூறியுள்ளார்.இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் சமிக்ஷா இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ள ஷயீல் ஓஸ்வாலுக்கும் இது இரண்டாம் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement
Advertisement