80களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சீதா. இவர் நடித்த ஆண் பாவம், குரு சிஷ்யன், ராஜாநடை என பல படங்கள் ஹிட் ஆகியுள்ளது. 80 ஸ் காலகட்டத்தில் மிகவும் பிஸியான ஒரு நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை சீதா, இவருக்கு படங்களில் நேரம் ஒதுக்க முடியாத நிலையால் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை கூட இவர் ஒதுக்கி இருக்கிறார். நடிகை சீதாவின் சினிமா வாழ்க்கை பாழாய் போனதற்கு முக்கிய காரணமே இவருடைய திருமண வாழ்க்கை தான்.

ஆண் பாவம் படத்திற்கு பின்னர் பார்த்திபன் இயக்கி நடித்த புதிய பாதை படத்தில் நடித்தார் சீதா. அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால், சீதாவின் வீட்டில் இவர்கள் காதலை ஏற்றுக்கொள்ளாததால் வீட்டை விட்டு வெறியேறினார். சீதாவிற்கும் நடிகர் பார்த்திபனுக்கும் கடந்த 1989 ஆம் ஆண்டு நண்பர்கள் முன்னிலையில் திருமணம் ஆனது. நடிகை சீதா திருமணத்திற்கு பின் நடிப்பதில் பார்த்திபனுக்கு பிடிக்கவில்லை.

Advertisement

10 ஆண்டு பிரேக் :

இதனால் பிசியாக நடித்து வந்த சீதா திருமணத்திற்கு பின் 10 வருடங்கள் சினிமாவை விட்டுவிட்டார். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். மேலும், ஒரு மகனை தத்தெடுத்து வளர்ந்தனர். அதன்பின்னர் 10 வருடங்கள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2001ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். 10 வருடங்கள் சினிமாவில் பிரேக் எடுத்த சீதா பின் 2002 ஆம் ஆண்டு மீண்டும் நடிக்கத் துவங்கினார்.

சீதா மகள்கள்

இரண்டாம் திருமணம் :

வயதாகி விட்டதால் இவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் சீரியலிலும் நடிக்கத் துவங்கினார் சீதா. இப்படி தனது இரண்டாம் இன்னிங்சை கஷ்டப்பட்டு துவங்கிய சீதா மீண்டும் 2010 ஆம் ஆண்டு சதீஷ் தனது 43 ஆம் வயதில் சீரியல் நடிகர் சதீஷ் சதீசுடம் காதல் மலர்ந்துள்ளது. சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் பின்னர் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

எனக்கு துணை வேண்டும் என்பதற்காக இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன். சதீஷ் என் வாழ்க்கையில் வந்ததை எண்ணி சந்தோஷப்படுகிறேன். வயதான காலத்தில் ஒரு பெண், ஆண் துணை இல்லாமல் வாழ முடியாது என்பதற்காகவே சதீசை திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியிருந்தார். ஆனால் சீதாவின் இரண்டாம் திருமணமும் சரியாக அமையவில்லை திருமணமான 6 ஆண்டுகளில் சதிஷயும் விவாகரத்து செய்தார் செய்தார் .

Advertisement

பார்த்திபன் குறித்து சீதா :

தற்போது தனது தாயுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் சீதா. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சீதா, பார்த்திபனை பிரிந்த காரணம் குறித்தும் அவரிடன் எதிரி பார்த்த காரணம் குறித்தும் பேசி இருக்கிறார். அதில் ‘எங்கள் பிரிவிற்கு நான் அதிகம் எதிர்பார்ப்பது தான் காரணம் என்று பலரும் உறுப்பினர்கள் அது உண்மைதான் நான் பார்த்தது என்னிடத்தில் ஒரு விஷயத்தை எதிர்பார்த்தேன். நான் உலகம் தெரியாத மிகவும் சராசரியான பொண்ணு.

இதுகூட இல்லை என்றால் :

ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து தான் நான் வந்தேன். அவரும் மிகப்பெரிய வசதி படைத்தவர் கிடையாது. அவரும் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர் தான். பணத்தை எதிர்பார்த்து போக கூடிய அளவிற்கு அவரும் கிடையாது. கண்டிப்பாக நான் அதையெல்லாம் அவரிடம் எதிர்பார்க்கவும் இல்லை. நான் சாதாரண பெண் எதிர்பார்க்கும் விஷயத்தை தான் அவரிடம் இருந்து எதிர்பார்ததேன் சுகாசினி ஒரு படத்தில் பாடுவாரே ‘என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான்’ என்று அது மாதிரி தான் என் கணவரிடம் முழு அன்பு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். இதுகூட இல்லை என்றால் வாழ்க்கையில் என்ன இருக்கிறது’ என்று கூறியுள்ளார் சீதா.

Advertisement