நடிகை ஷகிலாவை அவருடைய மகள் கொடூரமான முறையில் தாக்கி இருக்கும் சம்பவம் தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். போதும் போதும் போதும் என்ற அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை.

இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து இருந்தார். பின் இவர் கவுண்டமணியுடன் சில படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்து இருந்தார். மேலும், இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கரையோரம் ஒதுங்கி கவர்ச்சி ரோலில் நடிக்க ஆரம்பித்தார். இவர் முதலில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தது மலையாள கவர்ச்சி படங்களில் தான்.

Advertisement

சகிலா திரைப்பயணம்:

அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சி விருந்து படைத்தவர். மேலும், ஷகீலா தனது வாழ்கை வரலாற்றை படமாக எடுத்துள்ளார். இளமை போன பின்னரும் இவர் ஷகீலாவாக பல படங்களில் நடித்து இருந்தார். கவர்ச்சி நாயகியாக இருந்த இவரை தற்போது அம்மா என்று சொல்லும் அளவிற்கு மாற்றியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

சகிலா பற்றிய தகவல்:

இந்த ’நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனில் சகிலா போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அதில் இவர் மிக திறமையாக விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார். அதே போல இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும் இவர் மிளா என்ற திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மிளா ஒரு ஆடை வடிவமைப்பாளராக வேலை செய்து வருகிறார். அதே போல இவர் சில சீரியல்களில் கூட நடித்து இருக்கிறாராம்.

Advertisement

சகிலா மீது தாக்குதல்:

பின் அவருடன் ஷகிலா பிரச்சனை என்று தனியாக வந்துவிட்டார். தற்போது ஷகிலா தனியாக youtube சேனல்களில் சினிமா பிரபலங்களை வைத்து பேட்டி எடுத்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் நடிகை ஷகிலா மீது தாக்குதல் நடத்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகை சகிலாவின் அண்ணன் மகள் சீத்தல். இவரை 6 மாத குழந்தையாக இருக்கும்போது இருந்தே சகிலா வளர்த்து வந்து இருக்கிறார்.

Advertisement

சகிலா அளித்த புகார்:

இப்படி இருக்கும் நிலையில் நேற்று ஷகிலாவை அவருடைய வளர்ப்பு மகள் சீத்தல் கொடூரமாக தாக்கியிருக்கிறார். இதற்கு காரணம் சகிலாவிற்கும் அவருடைய வளர்ப்பு மகள் சீத்தல் குடும்பத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் சீத்தல், சீத்தலுடைய தாய் சசி, அவருடைய சகோதரி ஜமீலா ஆகியோர் சேர்ந்து சகிலா மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதை அடுத்து சமாதானம் பேச சென்ற ஷகிலாவின் பெண் வழக்கறிஞரையும் சீத்தல் குடும்பம் பயங்கரமாக தாக்கி இருக்கிறார்கள். இதனால் சகிலா தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இதற்கான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement