தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சினேகா. இவருடைய இயற்பெயர் சுகாசினி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகின்றார். இவர் 2001 ஆம் ஆண்டு ‘இங்கே ஒரு நீலப்பக்சி’ என்ற மலையாள மொழித் திரைப் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானர். மேலும்,அதே ஆண்டிலேயே ‘என்னவளே’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும்,இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சினிமா திரை உலகில் பிரபலமான ஜோடிகளில் பிரசன்னா மற்றும் சினேகா ஆகும். மேலும், இவர்களுக்கு தற்போது இரண்டாவது குழந்தை பிறக்கப்போகிறது என்றும், அதற்காக சமீபத்தில் தான் சினேகாவுக்கு வளைகாப்பு நடந்து முடிந்தது என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதுமட்டும் இல்லாமல் சினேகா குடும்பத்தினர் வளைகாப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையங்களில் பதிவிட்டு இருந்தார்கள்.

Advertisement

சினேகாவின் சிரிப்பு ஒன்றே போதும் ரசிகர்கள் விழுவதற்கு. அதனாலேயே அவரை ‘புன்னகை அரசி’ என்று தான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு அவருடைய சிரிப்பும், முகபாவமும் இருக்கும். மேலும், சினேகா இளமை ததும்பும் அழகான முகம் தோற்றத்திற்கும், நடிப்புத் திறனுக்காகவும் தான் ரசிகர்கள் இன்னும் வரை விரும்புகிறார்கள். தற்போது அவர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருகிறார். சினிமா திரையுலகில் உள்ள நடிகர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்று. அதனால் இவர் 2009 ஆம் ஆண்டு சினேகா அவர்கள் பிரசன்னாவுடன் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் தான் இணைந்தார்கள். பின்னர் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் எட்டு வருடங்களாக காதலித்து வந்தார்கள். அதனைத்தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சினேகா-பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பின் இவர் திருமணத்திற்குப் பிறகு சிறிது காலம் சினிமாவிலிருந்து இடைவெளி எடுத்துக் கொண்டார். இவர்களுக்கு தற்போது விகான் ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது. பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். தற்போது தனுஷுடன் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடித்து உள்ளார் என்ற தகவலும் வந்துள்ளது. நடிகை சினேகா இந்நிலையில் மீண்டும் சினிமாவிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். ஏனென்றால் தற்போது இரண்டாவது முறை சினேகா அவர்கள் கர்ப்பமாக உள்ளார் என்ற தகவல் இணையங்களில் பரவியது. அதுமட்டுமில்லாமல் சினேகா கர்ப்பமாக உள்ளார் என்று அறிந்தவுடன் குடும்பமே அவருக்கு வளைகாப்பு நடத்தி சந்தோஷமான தருணத்தை புகைப்படங்களாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளது.

Advertisement

ஆனால், சினேகாவை பார்த்தால் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்று சொன்னால் நம்ப முடியாது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களில் சினேகா-பிரசன்னாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள். இந்த நிலையில் நடிகை சினேகா அவர்கள் மேக்கப் இல்லாமல் தன் வீட்டில் தன் மகனுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்தும், சினேகாவுக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.மேலும்,இரண்டாவது குழந்தையின் வரவை எதிர் நோக்கி கொண்டிருக்கிறோம் என்று கூறினார்கள்.

Advertisement
Advertisement