இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘பம்பாய்’ படத்தில் ‘ஹம்ம ஹம்மா’ என்ற பாடலுக்கு நடனமாடி தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சியமான நடிகை சோனாலி பிந்த்ரே. சமீபத்தில் இவர் புற்று நோயால் பாதிக்கப்ட்டுள்ளார் என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்தி நடிகையான இவர் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழில் குணால் நடித்த ‘காதலர் தினம்’ நடிகர் அர்ஜுன் நடித்த ‘கண்ணோடு காண்பதெல்லாம் ‘ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் தனக்கு புற்றுநோய் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் சோனாலி தெரிவித்திருந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தற்போது நியூயார்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை சோனாளி கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வருகிறார். தனக்கு புற்று நோய் இருப்பதை அறிந்த நண்பர்களும் உறவினர்களும் அடிக்கடி தமக்கு போன் செய்து நலம் விசாரித்து தனக்கு ஆறுதலாக இருந்து வருவதாக கூறியிருந்தார். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை சோனாலி சமீபத்தில் தனது இன்ஸ்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் மொட்டையடித்துக் கொண்டு கையில் ஒரு புத்தகத்தடன் இருக்கும் சோனாலியை கண்டு அனைவரும் மிகவும் மனம் நொந்து போகினர். இருப்பினும் தான் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் புத்தக தினத்ததன்று நல்ல புத்தகங்களை படித்து வருவதாகவும் அந்த பதவில் குறிப்பிட்டுள்ளார் நடிகை சோனாலி.