தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முடி சூடா நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் திரைப்படத் துறையில் மிகப் புகழ் பெற்ற நடிகை என்று சொல்லலாம். இவர் 1969 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி 2018 ஆம் ஆண்டு வரை சினிமா உலகில் பயணத்தார். இவர் கமலஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் படங்களில் நடித்து உள்ளார். நடிகை ஸ்ரீ தேவி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி திரைப் படங்களிலும் நடித்து உள்ளார். இதுவரை இவர் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இவர் கலை துறையில் ஆற்றிய பணிக்காக பல்வேறு விருதுகளை வாங்கி உள்ளார். பின் நடிகை ஸ்ரீ தேவி அவர்கள் பாலிவூட்டில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். நடிகை ஸ்ரீதேவி அவர்கள் சிவகாசியில் பிறந்து வளர்ந்தாலும் பாலிவுட்டில் கொடிகட்டி பறந்தார். இவர் பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகையாக உயர்ந்து பின் அங்கேயே செட்டிலாகிவிட்டார். இவர் திடீரென்று மாரடைப்பால் இறந்து விட்டார். இவரது மரணம் இந்திய சினிமாவை சோகத்தில் ஆழ்த்தியதோடு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இதையும் பாருங்க : அண்டங்காக்கா கொண்டக்காரி பாடலில் வந்த அந்நியன் பாறை – இன்றும் கலையாத சங்கரின் ஓவியங்கள் – புகைப்படங்கள் இதோ.

Advertisement

இவரைப் போலவே இவருடைய மகள் ஜான்வி கபூரும் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜான்வி கபூர் ஹிந்தியில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தன் அம்மா ஸ்ரீதேவியை வளர்த்து விட்ட தமிழ் சினிமாவுக்கும், தெலுங்கு சினிமாவுக்கும் கூடிய விரைவில் வரப்போவதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில் தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி பட ஹீரோ விஜய் தேவர்கொண்டா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஜான்விடம் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்கள். ஆனால், ஜான்வி கபூர் நடிக்கவில்லை என்று மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சற்று முன்னர் ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் பிகினி உடையில் இளைஞருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அந்த இளைஞர் யார் என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு ஜான்வி கபூர் பதில் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement
Advertisement