நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இந்திய திரையுலகை அதிர்ச்சிகுள்ளாக்கி உள்ளது. மேலும், இவரது மரணம் தொடர்பான தொடர் சர்ச்சைகள் ஒரு பக்கம் இருக்க, அவரது உடல் நேற்று புதன்கிழமை இந்தியா வந்து சேர்ந்தது.
மும்பையின் அந்தேறியில் அவரது வீடு உள்ளது. இந்த வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டு பொது மக்கள் அஞ்சலிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், இதில் என்ன சர்ச்சை என்றால்,
மஹாராஷ்டிரா மாநில அரசு ஸ்ரீதேவிக்கு அரசு மாறியதை கொடுத்து தகனம் செய்தது. மேலும், அவரது உடலை சுற்றி இந்திய தேசிய கொடி போர்த்தப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தற்போது சர்ச்சை ஆகி உள்ளது. அவர் நாட்டிற்கு என்ன செய்தார், அவருக்கு தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை கொடுக்கிறீர்கள் என சர்ச்சை எழுந்துள்ளது