நெற்றியில் வில்லுடன் நிற்கும் ராமரை வரைந்து. ராமர் கோவில் விவாகரத்துக்கு ஆதரவு தெரிவித்த சுகன்யா.

By Rajkumar · 6/8/2020

இந்தியாவில் பல ஆண்டுகளாக சர்ச்சையை ஏற்படுத்தி வந்த அயோத்தி ராமர் கோவில் விவகாரத்திற்கு நேற்று முற்றுப்புள்ளி வைத்து இருந்தார் பிரதமர் மோடி. உ.பி.,யின் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிக்கு நேற்று பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு  அடிக்கல் நாட்டினார்.

https://twitter.com/SukanyaActor/status/1290884665390149638

ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டிய பின்னர் பேசிய மோடி. வரலாற்று சிறப்பு நிகழ்வில் நான் கலந்து கொள்ள அழைத்து இருப்பது நான் செய்த பாக்கியம், அதிர்ஷ்டம். கன்னியாகுமரியில் இருந்து ஷிர்பவானி, கொட்டேஷ்வரில் இருந்து காமாக்யா, ஜெகன்னாத்தில் இருந்து கேதர்நாத், சோம்நாத்தில் இருந்து காசி விஸ்வநாத் என்று இன்று நாட்டின் அனைத்து இடங்களும் ராமர் நம்பிக்கையில் மூழ்கியுள்ளது என்று கூறியிருந்தார்.

இருப்பினும் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் பலர் தங்களது ஆதரவையும், தீர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியதில் தனது ஆதரவை வித்யாசமான முறையில் தெரிவித்துள்ளார் பிரபல நடிகையான சுகன்யா. தமிழ் சினிமாவில் 90 ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர்.

இருப்பினும் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் பலர் தங்களது ஆதரவையும், தீர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியதில் தனது ஆதரவை வித்யாசமான முறையில் தெரிவித்துள்ளார் பிரபல நடிகையான சுகன்யா. தமிழ் சினிமாவில் 90 ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர்.

சின்னத்திரையில் இரண்டாம் இன்னிங்க்ஸை துவங்கிய சுகன்யா, சீரியலிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் ராமர் மீது தனக்குள்ள பக்தியை வெளிப்படுத்தும் விதத்தில், நடிகை சுகன்யா, நெற்றியில் ராமரின் உருவப்படத்தை வரைந்து அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் பெரும் வைரலாக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full