நடிகை சுகன்யா, தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு “புது நெல்லு புது நாத்து ” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று பல முன்னனி நடிகர்களுடனும் நடித்து வந்தார்.தமிழ் படங்களை தவிர்த்து தெலுங்கு,மலையாளம் போன்ற படங்களிலும் நடித்து வந்தார். நடிப்பையும் தாண்டி நடிகை சுகன்யாவிற்கு பரதநாட்டிய கலை மீது மிகுந்த ஆர்வமும் உண்டு. தமிழ் சினிமாவில் 90 ஆம் ஆண்டு நடிகர்களுடன் பிஸியாக நடித்து வந்த சுகன்யா ஒரு கட்டத்தில் எங்கு சென்றார் என்று தெரிவதில்லை.

Advertisement

2002 ஆம் ஆண்டு ஸ்ரீதரன் ராஜ கோபலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஒரு வருடங்களுக்கு மட்டுமே நீடித்த இவர்களது உறைவது பின்னர் 2003 ஆண்டு விவகாரத்தில் முடிந்தது. சுகன்யாவிற்கு ஒரு மகளும் இருக்கிறார். பெரும்பாலும் சுகன்யா இதுவரை எந்த ஒரு சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் அவரது மகளை அழைத்து சென்றது இல்லை.

மேலும் சினிமா துறையின் சாயமே படமால் இருக்கும் அவரது மகளின் தனிப்பட்ட தகவலை கூட சுகன்யா இதுவரை வெளிப்படையாக தெரிவித்ததில்லை. ஆனால் தற்போது சமீபத்தில் அவரது மகளின் புகைப்படங்கள் மட்டும் கிடைக்கப்பெற்றுள்ளது. இதோ அவர்களின் புகைப்படங்கள்.

Advertisement

Advertisement

தமிழ் சினிமாவில் பல முன்னனி நடிகர்களுடன் சுகன்யா நடித்திருந்தாலும், அவர் இதுவரை ரஜினியுடன் ஒரு படத்தில் கூட ஜோடி சேர்ந்து நடித்தது இல்லை. ஆனால், நீண்ட ஆண்டு இடைவெளிக்கு பிறகு ரஜனி நடிக்கும் காலா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை சுகன்யா.

Advertisement