“உன்ன வெள்ளாவி வெச்சி தான் வெளுத்தங்களா,இல்ல வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரியான டாப்ஸிக்கு பல ரசிகர்கள் உண்டு.சமீபத்தில் டாப்ஸி வெளியிட்டுள்ள புகைப்படத்தைக் கண்டு உங்களுக்குள் இப்படி ஒரு திறமையா என்று பாராட்டி வருகின்றனர்.
ஆடுகளம் படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்றாலும், இளைஞசர்கள் மத்தியில் டப்ஸ்க்கு நல்ல மவுஸ் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போது ஹிந்தி சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்து வருகிறார்.
டாப்ஸி தனது அன்றாட நடவடிக்கைகளையும்,தனது புகைப்படங்களையும் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு வருகிறார்.இயற்கையாகவே நல்ல உடல் அமைப்பை கொண்ட டாப்ஸி யோகா பயிற்சிகளையும் நன்றாக செய்துவருகிறார்.
சமீபத்தில் கடற்கரை ஒன்றில் தான் யோகா பயற்சி செய்துகொன்றிருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் டாப்ஸி. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாவ் !!என்று வாயை பிளந்து இன்னும் என்னென்ன திறமைகளை உங்களுக்குள் வைத்திருக்கிறீர்கள் என்று அவரை கேட்டு வருகின்றனர்.