உன்ன வெள்ளாவி வெச்சி தான் வெளுத்தங்களா,இல்ல வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரியான டாப்ஸிக்கு பல ரசிகர்கள் உண்டு. தென்னிந்திய நடிகையான நடிகை டாப்ஸி தற்போது இந்தி சினிமாவிலும் கலக்கி வருகிறார். தற்போது பிரபல இந்தி நடிகருடன் பைக்கில் ஊர் சுற்றி வரும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆடுகளம் படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கவில்லை என்றாலும், இளைஞசர்கள் மத்தியில் டப்ஸிக்கு நல்ல மவுஸ் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போது ஹிந்தி சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை டாப்ஸி மும்பை சாலையில் ஒரு நபருடன் பைக்கில் சவாரி செய்துகொண்டிருக்கும் புகைப்படங்கள் ஒன்று வெளியாகின. ஆனால் இறுதியில் விசாரித்ததில் அது ஹிந்தி நடிகர்
ஹர்ஷ் வர்தன் கபூர் என்று தெரிய வந்தது. அவர் தற்போது விக்ரமாதித்தயா என்ற இயக்குனர் இயக்கி வரும் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்துள்ளாராம்.
“புவீஸ் ஜோஷி சூப்பர் ஹீரோ” என்ற அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக தான் நடிகை டாப்ஸி இப்படி அவருடன் பைக்கில் ஊர் சுற்றியதாக தெரியவந்துள்ளது . இந்த படத்தில் நடிகை டாப்ஸி நடிக்கவில்லை,அப்படி இருக்க அவர் ஏன் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக இப்படி செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.