35 வயதாகியும் திருமணம் ஆகலை..! முதன் முறையாக காரணத்தை சொன்ன த்ரிஷா.!

By Ajju · 24/6/2018
தென்னிந்திய சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகை திரிஷா. தமிழ் தெலுகு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்து விட்டார். தற்போது தமிழில் 2 படமும் தெலுங்கில் 3 படமும் கையில் வைத்திருக்கிறார். இளம் நடிகையாக இருந்த போது பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த திரிஷாவிற்கு தற்போது 35 வயதாகி விட்டது.மேலும் முன்னை போன்றேல்லாம் படங்களில் கூட அதிகம் நடிப்பதும் கிடையாது. ஆனால் சென்ற ஆண்டு "ஹே ஜூட்" என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மாபெரும் வெற்றியடைய திரிஷாவிற்கு மீண்டும் பட வாய்ப்புகள் வர தொடங்கியள்ளது. ஆரம்பத்தில் தெலுங்கு நடிகர் ரானாவை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார் என்று தகவல்கள் வெளியாகின. அதன் பின்னர் அதுபோக சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது நெருங்கிய நபர் சிட்னி சேடேன் என்ற ஆடை வடிவமைப்பாளரை காதலித்து வருவதாக பல கிசுக்குக்கள் வெளியாகின. ஆனால் த்ரிஷா, சிட்னி தனது நெருங்கிய நண்பர் மட்டும் தான்,அவரை காதலிக்க்க வில்லை என்றும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து தன்னை பற்றிய பல கிசுக்கள் வந்ததால் என்னவோ, திருமணம் என்றாலே த்ரிஷாவியக்கு முகம் கோணாலகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்குபெற்ற இவர்' யார் நல்லவர்கள் யார் கேட்டவர்கள் யார் நல்லவர்கள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. யாரையும் நம்பவும் முடியவில்லை , நான் என்னை மட்டுமே நம்புகிறேன். அதனால், நானே எனது முதல் தோழியாக மாறிவிட்டேன். கல்யாண ஆசை இல்லை நான் தனியாக இருக்கவே விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full