நடிகை உதயதாரா தமிழ், மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்தவர். இவர் கேரளாவை சேர்ந்தவர். கேரளாவில் உள்ள மலபாரில் 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் தேதி பிறந்தார். இவருடைய உண்மையான பெயர் சிஜோ வர்கீஸ்.

Advertisement

படங்களில் நடிப்பதற்காக சிஜோ வர்கீஸ் என்ற பெயராய் உதயதாரா என மாற்றிக்கொண்டார். தனது 17 வயதில் இருந்து படங்களில் நடித்து வருகிறார் உதயதாரா. பெரும்பாலும் மலையாள படங்களில் நடிதத்துள்ளார்.

தமிழில் கடந்த 2007ஆம் ஆண்டு செய்வந்த தி நகர் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன்பின்னர் கண்ணும் கண்ணும் , மலையன், பயம் அறியான், விலை, குருசாமி, பகவான் என பல தமிழ் படங்களில் நடித்தார்.

Advertisement

Advertisement

கடைசியாக கடந்த 2015ஆம் ஆண்டு வேட்டையாடு என்ற தமிழ் படத்தில் நடித்தார். அதன்பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவருக்கும் ஜூபின் ஜோசப் என்பவருக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் ஆனது.

இந்த திருமணம் கேரளாவின் கொச்சினில் கோலாகலமாக நடவுபெற்றது. தற்போது படங்களில் நடிப்பதை நிறுத்துவிட்டு குடும்பத்தை பார்த்துக்கொள்கிறார் உதயதாரா.


Advertisement