சிறு வயதிலேயே தற்கொலை செய்து கொண்ட ஊர்வசியின் தம்பி குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஊர்வசி. இவருடைய இயற்பெயர் கவிதா ரஞ்சனி. திரை உலகிற்காக ஊர்வசி என்று மாற்றிக் கொண்டார். பின் இயக்குனர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தான் ஊர்வசி தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி நகைச்சுவையும் செய்யலாம் என்பதை நிரூபித்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார்.

Advertisement

ஊர்வசி திரைப்பயணம்:

தற்போது ஊர்வசி படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஊர்வசி நடித்திருந்த படம் அப்பத்தா. இந்த படத்தை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் அமித் பார்கவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இது ஊர்வசியின் 700 ஆவது படம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இந்நிலையில் நடிகை ஊர்வசியின் சகோதரர் குறித்து பலரும் அறியாத தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஊர்வசி சகோதிரிகள் குறித்த தகவல்:

நடிகை ஊர்வசிக்கு கல்பனா, கலரஞ்சனி என இரண்டு சகோதரிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. இவர்கள் இருவருமே சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர்கள். அதுமட்டுமில்லாமல் ஊர்வசிக்கு இரண்டு சகோதரிகள் இருப்பது பலரும் அறிந்தது. ஆனால், இவருக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் பிரின்ஸ். இவர் மலையாளத்தில் வெளிவந்த நந்து ஆப் லயனம் என்ற படத்தில் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Advertisement

ஊர்வசி சகோதரர் குறித்த தகவல்:

அது மட்டும் இல்லாமலே இவர் சில்க் ஸ்மிதா உடன் படத்தில் நடித்திருந்தார். ஆனால் இவர் தன்னுடைய 26 வயதிலேயே தற்கொலை செய்து கொண்டார். இவருடைய தற்கொலைக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. தற்போது ஊர்வசியின் சகோதரர் பிரின்ஸ் புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இவருக்கு கமல் என்ற இன்னொரு தம்பியும் இருக்கிறார். இவர் பிரமிளா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

ஊர்வசி தம்பி மனைவி:

ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். கணவனை விட்டு பிரிந்த பிறகு பிரமிளா அவருடைய சகோதரர் சுசீந்திரன் வீட்டில் தான் வாழ்ந்து வந்தார். ஆனால், அவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதால் அவருக்கு உதவ யாரும் இல்லை என்பதால் மிகவும் கஷ்டத்தில் இருந்தார். அதற்குப் பிறகு ஊர்வசி அக்கா நடிகை கல்பனா தான் பிரமிளாவிற்கு உதவி செய்திருந்தார். அதற்குப்பின் வறுமை கொடுமை தாங்க முடியாமல் ஊர்வசியின் தம்பி மனைவி பிரமிளா தற்கொலை செய்து கொண்டிருந்தார். இது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Advertisement