நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா தான் திருணம் செய்து கொள்ளாத காரணத்தை குறித்து முதன் முதலாக கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் வெண்ணிற ஆடை நிர்மலா. இவர் கும்பகோணத்தை சேர்ந்தவர். இவர் 60,70 காலகட்டத்தில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர். 1965ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தினால் தான் இவருடைய பெயர் வெண்ணிற ஆடை நிர்மலா என்று மாறியது. இதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

அதோடு இவர் ஜெய்சங்கர், சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ரஜினி காந்த் என பல நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். பின் சினிமாவில் வாய்ப்பு குறைய தொடங்கியவுடன் குணசித்திர வேடங்களில் நடித்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார். இதுவரை இவர் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதோடு இவர் நடிகை மட்டும் இல்லாமல் ஒரு பரத நாட்டியக் கலைஞரும் ஆவார். பல மேடைகளில் இவர் நடனம் ஆடி இருக்கிறார். பிறகு இவர் இடையில் சினிமாவில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்து கொண்டார்.

Advertisement

வெண்ணிற ஆடை நிர்மலா திரைப்பயணம்:

பிறகு இவர் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார். அதிலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற தொடரில் வெண்ணிற ஆடை நிர்மலா நடித்து இருந்தார். 2013 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் தான் தெய்வமகள். இந்த தொடரில் வாணிபூஜன், கிருஷ்ணா, ரேகா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த தொடர் 2013 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் தற்போது இந்த தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பாகி வருகிறது.

தெய்வமகள் சீரியலில் வெண்ணிற ஆடை நிர்மலா:

அதுமட்டும் இல்லாமல் இந்த தொடரை பிற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து ஒளிபரப்பி வருகிறார்கள். இந்த தொடரின் மூலம் தான் வாணிபோஜனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கித் தந்த தொடர். இந்த தொடர் இல்லத்தரசிகளுக்கு மட்டுமில்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி பார்த்த தொடராகும். இந்த தொடரின் மூலம் தான் வெண்ணிற ஆடை நிர்மலா மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் என்றே சொல்லலாம். இந்தத் தொடருக்குப் பின் இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தார்.

Advertisement

வெண்ணிற ஆடை நிர்மலா அளித்த பேட்டி:

இப்படி சினிமா உலகிலும், சின்னத்திரையிலும் சாதித்த நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிள் ஆகவே இருக்கிறார். இது பலரும் அறியாத ஒன்று. இந்நிலையில் இவர் திருமணம் செய்து கொள்ளாத காரணத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, திருமணம் வேண்டாம் என நான் முடிவு செய்ததற்கு என்னுடைய அப்பா, அம்மா தான் காரணம். ஏன்னா, என் அம்மா அவ்வளவு அழகாக இருப்பார்கள். ஆனால், எங்க அப்பா நான் நினைத்துக்கூட பார்க்காத அளவுக்கு அவங்க மேல சந்தேகப்படுவார். எனக்கும் இந்த மாதிரி ஒரு கணவர் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே நான் திருமணம் செய்து கொள்ளவில்லை.

Advertisement

திருமணம் செய்யாமல் இருக்க காரணம்:

மேலும், நான் வேகமாக நடந்தால் வேகமாக நடக்காதே கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டால் உன்னை யார் கட்டிப்பா? என சொல்வார்கள். மணிக்கட்டில் வேகமாக இறங்கினால் கீழே விழுந்து மூக்கை உடைத்து விட்டால் யார் கட்டிப்பா? என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இது எல்லாம் கேட்டு கேட்டு எனக்கு சலித்துப் போய்விட்டது. ஒரு கட்டத்தில் என்னை யாருமே கடிக்க வேண்டாம்? நான் இப்படியே இருந்து கொள்கிறேன் என முடிவு செய்து தான் திருமணம் செய்து கொள்ளாமல் தற்போது வரை தனியாக வாழ்ந்து வருகிறேன் என்று கூறி இருந்தார். இப்படி நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா அளித்த தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement