தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்களான கௌண்டமணி, செந்தில், வடிவேலு போன்றவர்களின் படங்களில் பெண் காமெடியன்களாக நடித்து பிரபமானவர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் நடிகை விசித்ராவும் ஒருவர்.ஆரம்ப காலத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பின்னர் கதாநாயகியாகவும், வில்லி ரோல்களிலும் நடித்துள்ளார். சத்யராஜ் நடிப்பில் வெளியான வில்லாதி வில்லன், சூப்பர் ஸ்டார் நடித்த முத்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

அதிலும் சத்தியராஜ் இயக்கி நடித்த ‘வில்லாதி வில்லன்’ படத்தில் இவர் மினிஸ்டர் அம்சவள்ளியாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் இவரது நடிப்பிற்கு நல்ல திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால், அதன் பின்னர் இவருக்கு கிடைத்தது என்னவோ கவர்ச்சி கதாபாத்திரங்கள் தான். இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் நடிகை விசித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

Advertisement

அந்த புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர், முன்னணி கதாநாயகியாக வந்திருக்க வேண்டியது. சத்யராஜ் மாம்ஸால போய்டுச்சு என்று மிக மோசமாக கமெண்ட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த விசித்ரா.எனது திறமையின் மீது சத்யராஜ் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவர், இயக்குநராக அவதாரமெடுத்த தனது முதல் படமான வில்லாதி வில்லன் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருந்தார். ஆனால் அந்த வேளையில் தமிழ் சினிமாவில் வெளிவந்த ஒரேமாதிரியான படங்களின் போக்கு என்னை சில நல்ல பாத்திரங்களை ஏற்கவிடாமல் தடுத்துவிட்டது என்று பதில் அளித்துள்ளார்.

இறுதியாக 2002 ஆம் ஆண்டு வெளியான இறுதி பாடகன் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சினிமாவில் இருந்து விலகி கணவர் பிள்ளைகள் என்று செட்டில் ஆகிவிட்டார். இருக்கு மூன்று ஆண் பிள்ளைகளும் இருக்கிறது. அதில் மூத்த மகன் கல்லூரி பிடிப்பை படித்து வருகிறார். மேலும், அடுத்து இரண்டு மகன்களும் ட்வின்ஸ் அவர்கள் இருவரும் ஒரே வகுப்பில் பள்ளியில் படித்து வருகிறார்கள். தற்போது தனது கணவரின் ஹோட்டல் தொழிலை உடன் இருந்து கவனித்து வருகிறார் விசித்திரா.

Advertisement
Advertisement