துபாயில் குடி போதையில் நிதானம் தெரியனால் நீரில் முழ்கி இறந்துள்ளார் நடிகை ஸ்ரீதேவி. இந்த மரணம் சற்று வழக்கத்திற்கு மாறானதாக இருந்ததால், இந்த மரணம் மேலும் சர்ச்சை ஆக்கப்பட்டது.
மீண்டும் மீண்டும் அவரது மரணம் பற்றி இந்தியா மீடியாக்கள் முழுவதும் பேசப்பட்டு வந்தது. பின்னர் ஒரு வழியாக 5 நாட்கள் கழித்து ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வந்தது. இதன்பின்னர் தான் அவரது மரணம் குறித்த சர்ச்சை ஓரளவிற்கு ஓய்ந்தது.
ஆனால் இந்த தொடர் சர்ச்சைகளினால் துவண்டு போன அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க ஒரு கடிதத்தை எழுதி ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர்.
ஸ்ரீதேவி மிகத்திறமையான ஒரு நடிகை. அதேபோல் தான் அவரது குடும்பதிற்கு ஒரு மிக அற்புதமான மனிதர். அவரது மரணம் இவ்வளவு சர்ச்சை ஆவது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது.
எங்களுக்கு அவரது மரணத்தை நினைத்து அழுவதற்கு கூட பிரைவசி கிடைக்கவில்லை. எங்களை தனியாக விடுங்கள்.என மிக நீண்ட ஒரு கடிதத்தை எழுதி உள்ளனர் ஸ்ரீதேவி குடும்பத்தினர்.