தமிழ் சினிமா வரிசையில் ரஜினி, விஜய் அடுத்து சிவகார்த்திகேயன் தான் இருக்கிறார் என்று அன்புச் செழியன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் நுழைந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெளியாகி இருந்தது. அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ராதாரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

Advertisement

அயலான் படம்:

மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படம் ஏலியன் சம்பந்தப்பட்ட படம் என்றும் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படம்:

தற்போது உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுகள் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. மேலும், இந்த படத்திற்கு கதாநாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். பின் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகி இருக்கும் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கிறார்.

Advertisement

பிரின்ஸ் படம்:

இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் உக்கரைன் நாட்டை சேர்ந்த மாடல் அழகி Maria Ryaboshapka கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சத்யராஜும் நடித்திருக்கிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக தயாராக இருக்கிறது. தற்போது சிவகார்த்திகேயன் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் மும்முறமாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்திற்கான பிரஸ்மீட் நடந்தது. அதில் படத்தை வெளியிடும் விநியோகஸ்தர் அன்புச் செழியன் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

Advertisement

அன்புச்செழியன் அளித்த பேட்டி:

அதில் அவர் கூறியிருந்தது, தமிழக முழுவதும் 650 திரையரங்குகளில் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படம் வெளியாகிறது. சிவகார்த்திகேயன் படம் என்றாலே ஹிட்டு தான். அதேபோல் இந்த படமும் ஹிட் அடிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. பொதுவாகவே தமிழ் சினிமா உலகில் ஒரு சில நடிகர்களை எல்லோருக்குமே பிடிக்கும். அந்த வரிசையில் எம்ஜிஆர், ரஜினி, விஜய் அடுத்து சிவகார்த்திகேயன் தான் இருக்கிறார். அவர் விரைவாகவே எல்லோர் மனதையும் கவர்ந்து விட்டார் என்று கூறியிருக்கிறார்

Advertisement