நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தாயாருக்கு ஆளுநர் விருது அறிவித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் நடன கலைஞர், தொகுப்பாளினி என பன்முகம் கொண்டவர். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும், கனா படம் இவருக்கு நல்ல பெயர் ஏற்படுத்தி தந்தது. மேலும், இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பிஸியான நடிகையாக திகழ்ந்து வருகிறார். சமீப காலமாக இவர் பெண் முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருந்த படம் “டிரைவர் ஜமுனா”.

Advertisement

ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்பயணம்:

வத்திக்குச்சி படத்தின் இயக்குனர் கிங்ஸ்லின் இயக்கத்தில் 18 ரீல்ஸ் நிறுவனத்தின் எஸ்பி சௌத்ரி இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் உடன் பிக் பாஸ் மணிகண்டன், ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்சி டிரைவராக நடித்து இருந்தார். இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படங்கள்:

இதனை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி நடித்த “ரன் பேபி ரன்” என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். ஆனால், அது ஒரு சிறிய கதாபாத்திரம் தான். அதனை தொடர்ந்து சில வாரங்களுக்கு முன் வெளிவந்த “சொப்பன சுந்தரி” என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து இருக்கிறார். இப்படத்தை எஸ்.எஸ்.சார்லஸ் இயக்கி இருக்கிறார். மேலும் லட்சுமி பிரியா, மீமீ கோபி, கருணாகரன், ரெட்டின் கிங்ஸ்லீ, ஷாரா, சுனில் ரெட்டி என பலரும் நடித்திருக்கின்றார்கள். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

Advertisement

ஃபர்ஹானா படம்:

தற்போது நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ஃபர்ஹானா. இந்த படத்தில் தன்னுடைய குழந்தைகளுக்காக மத கட்டுப்பாட்டுகளை எல்லாம் கடந்து வேலைக்கு செல்லும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை. இந்த படத்திற்கு எதிர்ப்புகள் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பெண்கள் முன்னேற்றத்தை மையமாக இந்த படம் உருவாக்கப்பட்டிருப்பதால் பிரபலங்கள் பலரும் இந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இப்படி ஐஸ்வர்யா ராஜேஷ் திரை உலகில் சாதிக்க பல கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

Advertisement

ஐஸ்வர்யா ராஜேஷ் தாயாருக்கு கொடுக்கும் விருது:

இப்படி ஐஸ்வர்யா ராஜேஷின் ஒவ்வொரு படிக்கும் உறுதுணையாக இருந்தது அவருடைய தாயார் நாகமணி தான். இவர் தன்னுடைய மகளை சுதந்திரமாக செயல்பட வைத்ததனால் தான் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த நிலைமைக்கு உயர்ந்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணனும் பிரபலமான நபர். தன்னுடைய பிள்ளைகளின் நலனுக்காக ஊறுதுனையாக நிற்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் தாயார் நாகமணி சிறப்பிக்கும் விதமாக ஆளுநர் விருது அறிவித்திருக்கிறார். மேலும் இந்த விருது மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று வழங்க இருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியான தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தாயாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement