தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தமிழ் சினிமா உலகில் ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்த இவர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் மூலம் இயக்குனர் ஆனார். அதன் பின்னர் தனுஷை வைத்து 2003 ஆம் ஆண்டு ‘காதல் கொண்டேன்’ படத்தை இயக்கினார். இந்த படம் தனுஷுக்கு ஒரு மிகப்பெரிய துவக்கத்தை கொடுத்தது. அதன் பின்னர் இவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது.

இதனிடையே இயக்குனர் செல்வராகவன் கடந்த 2006 ஆம் ஆண்டு சோனியா அகர்வாலை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை 2010 வரை மட்டுமே நீடித்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரம் பேசி விவகாரத்து பெற்றுக் கொண்டனர். இவருக்கு இருந்த குடிப்பழக்கத்தால் தான் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து இயக்குனர் செல்வராகவன் கடந்த 2011 ஆம் ஆண்டு கீதாஞ்சலி ராமன் என்பவரை திருமணம் ஆண்டு கொண்டார்.

Advertisement

செல்வராகவனின் திரைப்பயணம்:

இவர் செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் செல்வராகவன் அவர்கள் தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் பீஸ்ட், சாணிக்காகிதம் போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் இயக்குனர் செல்வராகவன் நடித்திருக்கிறார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த நிலையில் செல்வராகவன் நடிப்பில் உருவாகி இருக்கும் ’சாணிகாகிதம் படம் கூடிய விரைவில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாணிகாகிதம் படத்தின் போஸ்டர்:

மேலும், இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் தொடங்கி விட்டது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் ’சாணிகாகிதம்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்று இன்று வெளியாகியுள்ளது. அதில், செல்வராகவன் கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு பயங்கர டெரராக போஸ் கொடுத்திருக்கிறார். இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், இதுகுறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த போஸ்டருக்கு கமெண்ட்ஸ் பதிவு செய்துள்ளார். அதில் அவர், ’வாவ், செல்வா அத்தான்’ என்று குறிப்பிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

Advertisement

ஐஸ்வர்யா- செல்வராகவனுக்கு பதிவிட்ட பதிவு:

இப்படி ஐஸ்வர்யா பதிவிட்டு இருக்கும் பதவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், ஐஸ்வர்யா தன்னுடைய கணவர் தனுஷை பிரிந்து போதிலும் செல்வராகவன் மீது இன்னும் ஒரு மரியாதை கலந்த பாசத்துடன் இருக்கிறார் என்பது இந்த கமெண்ட் மூலம் தெள்ளத் தெளிவாகத் தெரிவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றார்கள். அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே செல்வராகவன் பிறந்தநாளுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்த்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தனுஷ்-ஐஸ்வர்யா விவகாரம்:

தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் தங்களின் 18 ஆண்டு திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக கூறி இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர பேசும் பொருளாக உள்ளது. தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். மேலும், பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். தற்போது ஐஸ்வர்யா இயக்கி உள்ள முசாபிர் எனும் மியூசிக் வீடியோவின் போஸ்டர் எல்லாம் வெளியாகி இருந்தது. இவர் அடுத்த படம் ஒன்றை இயக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement