தமிழ் சினிமாவில் நடிகர் கோடிக்கணக்கான ரசிங்கர்கள் கொண்ட ஒரு உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். அதிலும் விஸ்வாசம் படத்திற்கு பின்னர் தமிழகத்தில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் இவருக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர் என்பதை அறிய முடிந்தது.

இதுவரை வந்த அஜித் படங்களிலேயே விஸ்வாசம் படம் தான் அதிக வசூலை பெற்ற படம் என்ற சாதனையை படைத்து. சொல்லப்போனால் விஸ்வாசம் திரைப்படத்திற்கு பிறகு அஜித்தின் மாஸ் எங்கேயோ போய் விட்டது.

Advertisement

இந்நிலையில் நடிகர் அஜித் குறித்து இலங்கையில் பிரபல பத்திரிகை ஒன்று கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையின் தலைப்பில் யார் இந்த அஜித்? என்ற வாக்கியத்துடன் அந்த கட்டுரையை வெளியிட்டுள்ளது.

அதில் இலங்கையில் அஜித்திற்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர். எப்படி அவர் இலங்கையில் இந்த அளவிற்கு ரசிகர்களை கொண்ட ஒரு நடிகராக இருக்கிறார் என்று பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

Advertisement
Advertisement