தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

அனைத்து தேர்தலிலும் முதல் ஆளாக ஜனநாயக கடமையை அளிக்கும் இவர் இன்றும் வாக்களிக்க முதல் ஆளாக வந்தார். நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் காலை 7.15 மணிக்கே சென்று வாக்களித்தார்.

Advertisement

அஜித்தை கண்ட ரசிகர்கள் அஜித் வாழ்க ! வாழ்க ! என்று கோஷமிட்டனர்.
வாக்களித்துவிட்டு அஜித் செல்லும் போது அவரை பல ரசிகர்கள் பைக்கில் பின் தொடர்ந்து சென்றனர். ஏற்கனவே அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சயில் ஈடுபட்ட போது அவரை காண ரசிகர்கள் திரண்டனர் அப்போது அங்கிருந்தவர்கள் இதனால் தான் அஜித் வெளியில் வருவதே இல்லை என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement