இரண்டாம் நாளே சரிவை சந்தித்துள்ள விடாமுயற்சி படத்தின் வசூல், எவ்வளவு தெரியுமா?
விடாமுயற்சி படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல்தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடித்து வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.
தற்போது இவர் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஜெரினா கஸான்ட்ரா, அர்ஜுன், ஆரவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படம் கடந்த 1997 ஆண்டு வெளிவந்த அமெரிக்க திரைப்படமான பிரேக் டவுனின் தழுவலாகும்.
விடாமுயற்சி படம்:
இப்படம் முதலில் கடந்த பொங்கல் அன்று ரிலீஸ் ஆகயிருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி போனது. பின், அனைவரும் எதிர்பார்த்த அஜித்தின் விடாமுயற்சி படம் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. முதல் நாள் முதல் திரையரங்குகளில் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று விடாமுயற்சி படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
விடாமுயற்சி வசூல்:
இப்படம் Sacnilk இணையதளத்தில் தகவல் படி, இரண்டாவது நாளில் இந்தியாவில் சுமார் 8.75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது முதல் நாளை ஒப்பிடும் போது வசூலில் பெரும் சரிவு ஆகும். விடாமுயற்சி படம் இந்தியாவில் முதல் நாளில் ரூபாய் 26 கோடி வசூல் செய்ததாகவும், குறிப்பாக, தமிழில் ரூபாய் 25.5 கோடியும், தெலுங்கில் ரூபாய் 0.5 கோடியும் வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இரண்டாவது நாளில் விடாமுயற்சி இந்தியாவில் வெறும் 8.75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் 8.4 கோடி வசூலித்து இருக்கிறது.
படம் குறித்த தகவல்:
இனி வரும் நாட்களில் விடாமுயற்சி படத்தின் வசூல் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும், படத்தில் அர்ஜுன் (அஜித்) , கயல் (திரிஷா) ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் அதீத அன்பு வைத்திருக்கும் கணவர் மனைவியாக இருந்து வருகின்றனர். இப்படி இருக்கும் போது இருவரும் ஒரு நாள் ஒரு நீண்ட பயணம் சென்றார்கள். அப்போது இவர்களின் கார் பாலைவனத்திற்கு நடுவே நின்று விடுகிறது. அப்போது ட்ரக்கில் ரக்ஷித் (அர்ஜுன்) வருகிறார்.
படத்தின் கதை:
அவர் இருவருக்கும் உதவி செய்ய முன் வருகிறார். இதனால் திரிஷாவை அவரது வாகனத்தில் அஜித் ஏற்றி அனுப்பிவிடுகிறார். தனது மனைவியை அழைத்து சென்ற பின்னர் அவர் அவரின் ட்ராக்கில் திரிஷாவை ரக்ஷித் (அர்ஜுன்) மீண்டும் ட்ராக்கில் தன்னையும் அழைத்து செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் இருவரும் திரும்பி வராததால் தனது மனைவியை தேடி செல்கிறார் அர்ஜுன் (அஜித்). அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.