தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் அஜித் எந்த அளவிற்க்கு சிம்பிளான மனிதர் என்பது தெரியும். இதுவரை எந்த ஒரு விளம்பரத்தையும் விரும்பாத அஜித் பற்றி தற்போது ஒரு சர்ச்சையான வதந்தி ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

நடிகர் அஜித் தன்னை பற்றிய செய்திகள் இணையதளங்களிளும், சமூக ஊடகங்களிலும் உடனுக்குடன் வரவேண்டும் என்பதற்காகவே தனி சம்பளம் கொடுத்து ஒரு குழுவை அமைத்து உள்ளார் என்றும்.

இதையும் படியுங்க : அஜித் பற்றி வந்த செய்தி பொய்..!கொண்டாட்டம் போட்ட ரசிகர்கள் ஏமாற்றம்..!

Advertisement

அது போக சமூக வலைதளத்தில் தன்னை பற்றிய எதாவது ட்ரோல் வந்தால் அவர்களுக்கு தக்கபதிலடி கொடுக்கவும் பணம் கொடுத்து ஒரு குழுவை அஜித் தொடங்கினார் என்று பிரபல பத்திரிக்கையில் செய்தி வெளியானதாக சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வெளியாகி வருகிறது.

இந்த செய்தி உண்மையா இல்லையா என்று பலரும் ஆராய்ந்து வரும் நிலையில், தற்போது இந்த செய்தி அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், உண்மையில் அஜித் இதுபோன்ற கேவலமான விளம்பரங்களை எப்போதும் விரும்பியது இல்லை என்று பொதுவான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Advertisement