தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் மற்றும் சமீபத்தில் வெளியான நிமிர் போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்தவர் மலையாள நடிகை பார்வதி நாயர்.இவர் சமீபத்தில் ஓலா கேப்-ல் பயணம் செய்த போது அந்த கேப் ஓட்டுனரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பிரபல இணைய தளத்தில் செய்தகள் வெளியானது.
ஆனால் அந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளார் பார்வதி நாயர் .தனது ட்விட்டர் பக்கத்தில் தான் ஓலா பயணத்தின் போது தனக்கு ஏற்பட்ட அசோவ்கர்யமான பயணத்தையே தாம் கூறியதாகவும் மேலும் ஓலா ஓட்டுநர் தான் செய்தது ஸ்பெசல் புக்கிங் என்று தெரிந்தும் அவர் தன்னிடம் மரியாதை இல்லாமலும்,செல்லவேண்டிய பாதையைவிட்டு வேறு பாதையில் சென்றதாகவும் கூறியுள்ளார்.
மற்றபடி அந்த ஓட்டுநர் தமக்கு பாலியல் தொல்லை எல்லாம் கொடுக்கவில்லை என்வே இதுபோன்ற வதந்திகளை பரப்பாதிர்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் ஓலாவின் சேவைகள் மிகவும் மோசமாக உள்ளது என்றும் நாம் செல்லும் இடம் வருவதற்கு முன்பாகவே நாம் செல்லவேண்டிய இடம் வந்துவிட்டதாக கமிக்கிறது என்றும் ட்விட்டரில் கூறியுள்ளார். இதற்கு ஓலா நிறுவனம் அவருக்கு ட்விட்டரில் தங்களுக்கு சேவை செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று சமாதானம் கூறியுள்ளது.