தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் அஜித். ஒவ்வொரு படத்திலும் அவரது தரிசனத்தை காண அவருக்கென ஒரு கூட்டம் இருக்கிறது. அதற்கேற்றார் போல அஜித்தும் மிகவும் தைரியமானர்.
ஒரு நடிகர் என்பதை தவிற அவர் இரு லைசென்ஸ்டு பைலட் மற்றும் ஒரு கார் ரேசர் ஆவர். எந்த ஒரு படத்தில் நடிக்க துவங்கிவிட்டால் முடிவெடுத்த பின்னர் அதனை பற்றி கவலை இல்லாமல் நடித்துவிடுவார்.
இப்படி ஒரு நடிகர் பயந்து பயந்து நடித்த ஒரே படம் ‘வரலாறு’. கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய இந்த படத்தில் திருநங்கை போன்ற கேரக்டரில் நடித்திருப்பார் அஜித். ஆனால் படத்தின் சூட்டிங் முடியும் வரை, இது சரியாக இருக்குமா..? நான் நன்றாக நடிக்கிறேனா..? என பயந்துகொண்டிருந்தாரம் அஜித்.ஆனால் படம் வெளியான பின்னர், அந்த கேரக்டரில் நடித்த அஜித்திற்கு பல விருதுகளை பெற்றுத்தந்தது குறிப்பிடத்தக்கது.