தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் தான் மோகன் ராஜா. இவர் சினிமாவில் மிக பிரபலமான எடிட்டர் மோகனின் மகன் மற்றும் பிரபல நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன் ஆவார். மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த “தனி ஒருவன்” படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. தனி ஒருவன் படத்திற்கு முன்பு வரை இயக்குனர் மோகன் ராஜா அவர்கள் ரீமேக் படங்களை தான் தமிழ் சினிமாவில் இயக்கியிருந்தார்.

அவர் முதன் முதலாக இந்த படத்தின் மூலம் தான் தன்னுடைய சொந்த கதையை இயக்கி இருந்தார். இந்த படம் மிகவும் சுவாரசியமான ஆக்ஷன் படமாக இருந்தது. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி உட்பட பல்வேறு நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்நிலையில் இந்த படத்தில் சித்தார்த் அபிமன்யூ என்ற கதாபாத்திரத்தில் முதலில் தல அஜித் தான் நடிக்க வைக்க இருந்ததாக மோகன் ராஜா பேட்டியில் கூறி உள்ளார்.

இதையும் பாருங்க : அஜித் பாட்டு, காருக்குள் ஆட்டம். ஊரடங்கி மீறி பிறந்தநாளை கொண்டாடினாரா பார்வதி. வைரலாகும் வீடியோ.

Advertisement

தனி ஒருவன் படத்தில் நடிகர் அரவிந்தசாமி அவர்கள் சித்தார்த் அபிமன்யூ என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும், இந்த படத்தில் ஹீரோவை விட இவருடைய கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் சினிமாவிலிருந்து நீண்ட காலம் பிரேக் எடுத்துக் கொண்ட நடிகர் அரவிந்த் சாமிக்கு சரியான என்ட்ரியாக இந்த படம் அமைந்தது.

இந்நிலையில் சித்தார்த் அபிமன்யூ கதாபாத்திரத்தில் தல அஜித்தை நடிக்க வைக்க இருப்பதாக இருந்தது என்று மோகன் ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து மோகன் ராஜா பேட்டியில் கூறியது, தனி ஒருவன் படத்தில் சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முதலில் நாங்கள் நடிகர் அஜித்தை தான் நினைத்தோம். அது மட்டுமில்லாமல் பல நடிகர்களை சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க யோசித்தோம்.

இதையும் பாருங்க : வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி, விஜய் மற்றும் முரளிக்கு இப்படி ஒரு சொந்தமா ?

Advertisement

கன்னட நடிகர் சுதீப், நடிகர் ராணா என பல நடிகர்களை யோசித்தோம். ஆனால், இறுதியாக நடிகர் அரவிந்த்சாமி தான் இந்த சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தில் நடித்து தூள் கிளப்பினார். மேலும், இந்த கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் நடித்து இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால், அவர் நடிக்கவில்லை என்று கூறி உள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அஜித் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் செம மாஸ் ஆக இருந்திருக்கும் என்று கமெண்டுகள் வருகிறது. அதுமட்டுமில்லாமல் அஜித் வில்லனாக தமிழில் நடிக்கும் முதல் படமாக இது இருந்து இருக்கும்.

Advertisement

தற்போது மோகன் ராஜா அவர்கள் இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்தாதுன் என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளார். பாலிவுட்டில் கடந்த ஆண்டு பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படம் ‘அந்தாதுன்’. இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கினார். இது காமெடி கிரைம் த்ரில்லர் படம். அந்தாதுன் படம் கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது. இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ளார். இந்த படத்தின் உரிமையை பிரசாந்த் தந்தை தியாகராஜன் பெற்று உள்ளார்.

Advertisement