விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ தொடரில் வரும் செம்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதிந்துள்ளது. இந்த தொடரில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மானசா இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் இளசுகள் மத்தியிலும் படு பெமஸ் ஆகிவிட்டார். .

Advertisement

சீரியல் நடிப்பதற்கு முன்பாகவே இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பிப்பார்ப்பான ‘மானாட மயிலாட’ எனும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மேலும், மானஸா, மானஸ் என்பவரை நீண்ட வருடங்களாக காதலித்து வருகிறார்.ஆனால், இவர் சீரியலில் நடிப்பது இவரது காதலருக்கு பிடிக்காது என்பதால் இவர்கள் இருவருக்கும் சண்டை கூட வருமாம்.

மானஸா மற்றும் மானஸ் ஆகியோர் இருவரின் காதலில் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இவர்கள் இருவரும் பிரிந்து ஒரு சில நாட்களே ஆன நிலையில் தற்போது ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர் மானஸ் தற்போது சுபிக்ஷா என்பவரை காதலித்து வருகிறார்.

Advertisement

Advertisement

மானஸாவை போலவே இவரும் ஒரு நடன கலைஞர் தான் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், சமீபத்தில் சுபிக்ஷாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்ட மானஸ், என்னுடைய துணைவி என்று குறிப்பிட்டுள்ளார். இதை அனைத்தையும் பார்த்து மானஸா காண்டில் இருந்து வருகிறாராம்.

Advertisement