தன் கணவர் குறித்து பேசிய நெட்டிசனை புஷ்பா பட நடிகை செருப்பால் அடிப்பேன் என்று திட்டியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தை துவங்கியவர் அனுசுயா. பின் இவர் சாக்ஷி டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி இருந்தார். அதன் பின்பு இவர் பல டிவி நிகழ்கிகளில் தொகுப்பாளராகவும் இருந்தார்.இந்த பிரபலத்தினால் இவருக்கு சினிமாவில் டப்பிங் பேசும் வாய்ப்பு கிடைத்து இருந்தது.

பின் இவர் வேதம், பைசா போன்ற பல படங்களில் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருந்தார். அதிலும் இவர் ஜபர்தஸ்த் எனும் நகைச்சுவை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அனுசுயா சினிமா வட்டாரங்களிலும் பிரபலமானார். அதன் பின் இவர் நாகார்ஜூனா நடிப்பில் வெளிவந்த சொக்கடே சின்னி நயனா என்னும் படத்திலும் நடித்து இருந்தார்.

Advertisement

அனுசுயா திரைப்பயணம்:

அதைத்தொடர்ந்து சக்ஷணம் எனும் படத்தில் நெகடிவ் கதாபத்திரத்தில் நடித்திருந்தார் அனுசுயா. இப்படி இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த புஸ்பா படத்திலும் அனுசுயா நடித்து இருந்தார்.இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்து இருந்தது. இந்த படத்தில் அனுசுயா வில்லியாக நடித்திருந்தார்.ற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. அதிலும் அனுசியா நடித்து வருகிறார்.

லைகர் பட சர்ச்சை :

அதே போல சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே சமயத்தில் வெளியான மைக்கேல் படத்தில் கெளதம் மேனனின் மனைவியாக நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த ஆண்டு முதலே சமூக வலைதளத்தில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அதற்கு முக்கிய காரணமே இவர் கடந்த ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான லைகர் படம் குறித்து நெகடிவ்வாக அனுஷியா மறைமுக பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.

Advertisement

இதனால் விஜய் தேவர்கொண்டா ரசிகர்கள் பலரும் இவரை Aunty என்று குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்து வந்தனர். இதனை பார்த்து அனுசியாவும் தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். இதனால் பொங்கி எழுந்த விஜய் தேவர் கொண்ட ரசிகர்கள் Aunty என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்டிங்கில் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து அனுசுயா, என்னை ஆண்டி என்று அழைத்தால் போலீசில் புகார் கொடுப்பேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.

Advertisement

அப்படி இருந்தும் சமூக வளைத்ததில் இவரை கேலி செய்யும் கூட்டம் அடங்கியபாடில்லை. அந்த வகையில் சமீபத்தில் இவர்  தனது கணவரோடு இருக்கும் படத்தைப் பகிர்ந்து, அவரோடு சந்தோஷமாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.அதற்கு நெட்டிசன் ஒருவர், அவரிடம் நிறைய பணம் இருக்கிறது, அதுதான் மகிழ்ச்சிக்கு காரணம் எனத் தெரிவித்திருந்தார். அதற்கு, “என்னடா தம்பி அப்படி சொல்லிவிட்டாய். அவரிடம் எவ்வளவு இருக்கிறது? என்னிடம் பணம் இல்லையா? கன்னத்தில் போட்டுக்கொள், இல்லையென்றால் செருப்பால் உன் கன்னத்தில் அடிப்பேன்” எனத் தெரிவித்திருக்கிறார் அனசுயா.

அதற்கு அந்த நெட்டிசன், உண்மையை புரிந்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எவ்வளவு சொன்னாலும் உண்மை உண்மை தான் என்று தெரிவித்திருந்தார்.அதற்கு பதிலளித்த அனசுயா, “எல்லாம் தெரிந்த மாதிரி பேசாதே. மஞ்சள் காமலை வந்தவனுக்கு உலகம் முழுவதும் மஞ்சளாக தெரியும். உன் புத்தி பணத்தில் இருக்கிறது. ஆனால் அனைவருக்கும் அப்படி இருக்காது. முடிந்தால் நல்லவனாக மாறு” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement