நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. பாலிவுட்டின் டாப் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி மலையாள நடிகர் பிருத்விராஜ் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனுமான நடிகர் ராம்சரண் நடித்த ரகுள் பிரீட் சிங் நிக்கி கல்ராணி தமன்னா என்று பல்வேறு தளங்கள் கொரோனா தொட்டால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்கள்.

அதே போல பல்வேறு சின்னத்திரை நடிகர் நடிகைகள் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பேவா சீரியலில் நடித்து வரும் இளம் நடிகையும் அவரது குடும்பத்தினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதனை அவரே தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

சன் தொலைக்காட்ச்சியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துவங்கப்பட்டது ‘அன்பே வா’ சீரியல். விராட் என்பவர் நாயகனாக நடிக்க டெல்னா டேவிஸ் என்பவர் நாயகியாக நடித்து வருகிறார். கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இவருக்கும் இவரது குடும்பத்தாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது குறித்து பதிவிட்டுள்ளார்.

இவர் கடந்த ஏப்ரல் 12ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாராம். ஆனால் உடனே தனிமைப்படுத்திக் கொள்ள தற்போது குணமாகியுள்ளாராம்.ஆனால் என்ன சோகம் என்றால் அவரது குடும்பத்தார் தற்போது நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்களாம். இது நமக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக அவரே பதிவு செய்துள்ளார். மேலும், இந்த வைரஸ்ஸை அலட்சியப்படுத்தாமல் ஆனால் என்ன சோகம் என்றால் அவரது குடும்பத்தார் தற்போது நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்களாம். இது நமக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக அவரே பதிவு செய்துள்ளார்.

Advertisement
Advertisement