படத்தில் நடிக்க நகை அடமானம் ! ரூ.10 லட்சம் ஏமாந்த பிரபல தொகுப்பாளர் ! புகைப்படம் உள்ளே

By Ajju · 12/4/2018
விஜய் டிவி யில் தொகுலளராக இருந்துவிட்டால் பின்னர் எந்த அளவிற்கு உயர்ந்து விடலாம் என்று சொல்லி தெரிய தேவையில்லை. விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றிய சிவகார்த்திகேயன், மா.கா. பா,ரோபோ ஷங்கர் போன்ற பலரும் சினிமாவில் இன்று பிரபலமாக இருந்து வருகின்றனர். அதே போன்று தற்போது விஜய் டிவி கலக்கப்போவது யாரு என்ற நிகச்சியின் மூலம் மக்கள் அனைவருக்கும் பரிட்சயமாணவர் தொகுப்பாளர் ரக்ட்ஷன். கலக்கப்போவது யாரில் பல சீசன்களாக தொகுப்பாளராக பணியாற்றி வரும் ரக்ட்ஷனுக்கு ஏகப்பட்ட பெண் ரசிகர்களும் உண்டு.சின்னத்திரையில் நுழையும் அனைவருக்குமே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருந்தே தீரும். அதுபோன்று தான் ரக்‌ஷனும் ஆரம்பத்தில் பல டிவி சானல்களில் வேலை தேடி அலைந்து கொண்டிருந்த போது தெரிந்த ஒருவர் மூலம் சினிமாவில் நடிக்க முயற்சித்திருக்கிறார்.மேலும் அந்த நபர் ரக்‌ஷனிடம் பணம் வாங்கிக்கொண்டு அவரை ஹீரோவாகி விடுகிறேன் என்று ஷூட்டிங்கேள்ளாம் நடத்தினாரம். ரக்‌ஷனும் நடிப்பதற்காக தன்னிடம் இருந்த நகையை எல்லாம் அடகு வைத்து அந்த நபருக்கு பணம் கொடுத்துக்கொண்டே இருந்தாராம்.இப்படியே சுமார் 10 லட்சம் வரை இழந்த விட்டாராம். சில நாட்கள் கழித்து அந்த நபர் மீண்டும் பணம் கேட்க சுதாரித்து கொண்ட ரக்‌ஷன் அந்த படத்தில் இருந்து ஒதுங்கிவிட்டதாக அண்மையில் ரக்‌ஷன் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full