பிச்சைக்காரர்களுடன் படுக்க வைத்த இயக்குனர் மீது அஞ்சலி கோவப்பட்டு இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அஞ்சலி. இவர் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பே விளம்பர படங்களில் தான் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு தான் இவருக்கு 2007 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளி வந்த கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இந்த படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் இவர் மிக சிறப்பாக நடித்திருந்தார். அதோடு இவர் முதல் படத்திலேயே மக்கள் மனதில் பிரபலமானார் என்று சொல்லலாம். பிறகு இவர் அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் இவருடைய சினிமா உலகிற்கு தூக்கி விட்டது. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வந்தார். இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து இருக்கிறார்.

Advertisement

அஞ்சலி குறித்த தகவல்:

சமீப காலமாகவே நடிகை அஞ்சலிக்கும், நடிகர் ஜெய்க்கும் இடையே காதல் இருக்கிறது என்று பல கிசுகிசுக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. அதோடு சினிமாவில் சில ஆண்டுகளில் உடல் எடை கூட சற்று பருமனானார் அஞ்சலி. இதனால் இவருக்கு பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது கடும் உடற்பயிற்சிகளை செய்து ரொம்பவும் பிட்டாகா மாறி விட்டார் அஞ்சலி. மேலும், குடும்ப பிரச்சினை காரணமாக சில காலமாக திரைப்படங்களில் தலை காட்டாமல் இருந்த அஞ்சலி மீண்டும் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார்.

ஃபால் வெப் தொடர்:

தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர் சி 15 படத்தில் அஞ்சலி கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தில் ராம்சரண் நடித்து இருக்கிறார். மேலும், இவர் படங்களில் மட்டும் இல்லாமல் வெப் தொடரிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் தொடர் ஃபால். இதில் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். தற்கொலை முயற்சிக்கு பின் 24 மணி நேரம் நினைவில்லாத ஒரு இளம் பெண்ணின் கதையை மையப்படுத்தி இந்த ஃபால் தொடர் உருவாகி இருக்கிறது.

Advertisement

இதனை அடுத்து இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் அங்காடி தெரு படத்தின் போது அஞ்சலி அனுபவித்த கஷ்டம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, வசந்த் பாலன் இயக்கத்தில் அங்காடி திரைப்படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடித்திருந்தார். இந்த படத்தில் சென்னைக்கு பிழைப்பு தேடிவரும் பெண்கள் துணிக்கடையில் எவ்வாறெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை வைத்துதான் இயக்குனர் எடுத்திருந்தார். இந்த படத்தில் அஞ்சலியின் நடிப்பு சிறப்பாக இருந்தது. அதுவும் கிளைமாக்ஸ்ல் இவருடைய காட்சி பார்ப்போரையே கலங்க வைத்துவிட்டது. இதற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசு விருதும் கிடைத்தது.

Advertisement

மேலும், வசந்த் பாலன் படப்பிடிப்பு தொடங்கிய போது அஞ்சலிக்கு நாட்கள் செல்ல செல்ல இயக்குனர் வசந்த் பாலன் படபிடிப்பில் செய்யும் விஷயங்கள் பிடிக்காமல் போனது. குறிப்பாக பிச்சைக்காரர்களுடன் சாலையில் படுக்க வைத்து அவர் எடுத்த காட்சிகள் பிடிக்கவில்லை. இதனால் இவர் இயக்குனர் மீது கோபம் கொண்டார். ஆனால், படம் வெளியான பிறகு அந்த சீன்களை பார்த்து அவர் மனம் மாறிவிட்டாராம். இந்த படம் தான் அஞ்சலி திரை வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மாறி இருக்கிறது. தற்போது இந்த தகவல் இணையத்தில் படு வைரலாகி வருகிறது

Advertisement