மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை அஞ்சலி நாயர். இவர் ரஜினிகாந்த நடித்திருந்த அண்ணாத்த படத்தில் படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்திருந்தவர் நடிகை அஞ்சலி நாயர்.இதனை அடுத்து சமீபத்தில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் மாமனிதன். இந்த படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்காக இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து இசை அமைத்திருக்கின்றனர்.

முதல் திருமணம் :

இந்த படத்தில் அஞ்சலி நாயர் நடித்து இருந்தார். இதனிடையே இவர் திரைப்பட இயக்குனர் அனீஷ் உபாசனாவை திருமணம் செய்து இருந்தார். பின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார் அஞ்சலி நாயர். முதல் திருமணத்தில் இவருக்கு என்ற மகள் ஆவ்னி இருக்கிறார். இவர் 5 சுந்தரிகள் என்ற படத்தில் அஞ்சலியின் மகளாக நடித்து இருப்பார்.

Advertisement

இரண்டாவது திருமணம் :

அஞ்சலி நாயருக்கும் ஆவ்னிக்கு 5வது மகளும் இருக்கின்றது. இப்படி ஒரு நிலையில் திருமணம் ஆகி 10 ஆண்டு கழித்து ஆவ்னியை விவாகரத்து செய்தார்.. பின் அஞ்சலி நாயர் உதவி இயக்குனர் உதவி இயக்குனர் அஜித் ராஜுவை காதலித்து வந்தார். இவர்கள் காதல் குறித்து விவகாரம் சோசியல் மீடியாவில் உலா வந்து இருந்தது. இதனை அடுத்து அஞ்சலி நாயர்-அஜித் ராஜுவை கடந்த பிப்ரவரியில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக அறிவித்திருந்தார்.

அஞ்சலி நாயர் திருமணம் ஆகி 5 மாதத்தில் பெண் குழந்தைக்கு தாயாகி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தான் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு கொடுத்திருந்த பேட்டியில் தன்னுடைய சினிமா வாழக்கையில் நடந்த கசப்பான சம்பத்தை பற்றி கூறியிருந்தார்.அவர் கூறுகையில் ” நான் கேரளத்து பெண்ணாக இருந்தாலும் எனக்கு சரளமாக தமிழ் பேச வரும். மற்றவர்கள் நீங்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவரா? என கேட்கும் அளவிற்கு தமிழில் பேசுவேன்.

Advertisement

தவறாக நடந்து கொண்ட வில்லன் நடிகர் :

இதனால் நான் தமிழ் படங்களில் நடக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் முதன் முதலாக தமிழில் நடித்த படத்தின் வில்லன் நடிகர் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார். அந்த நடிகர் அந்த படத்தில் வில்லன் மட்டும் கிடையாது படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்தார்.படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் என்னை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. தொடர்ந்து எனக்கு தொந்தரவு கொடுத்து வந்தார்.

Advertisement

கொள்ள முயற்சி செய்தார் :

என்னை காதலிக்கிறேன் என்று கூறி எங்கே சென்றாலும் பித்தொடர்ந்து வந்து டார்ச்சர் செய்தார். ஒரு முறை ரயிலில் பயணம் செய்யும் போது என்னை கீழே தள்ளி கலை செய்ய முயற்சி செய்தார். பின்னர் என்னுடைய ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து வாங்கிக்கொள்ளுமாறு கூறினார். அந்த நடிகர் இப்படி தொடர்ந்து டார்ச்சர் செய்த காரணத்தால் நான் போலீஸில் புகார் கொடுத்தேன். பின்னர் நான் கேரளாவிற்க்கே திரும்பி வந்துவிட்டேன் என்று கூறினார் நடிகை அஞ்சலி நாயர்.

Advertisement